செவ்வாய், செப்டம்பர் 20, 2011

சாக்கடை காதலனின் சங்கீத வாழ்த்துகள்


ஊழல் என்னும்
வீதியிலே
உலா வரும்
ஊமைப் பெண்ணே ....!
நான் தான் - நின்
காதலன் ...!
அரசியல் என்பது
அடியேனின் திரு நாமம் ....!

அப்பாவி என்பவன்
எனக்கு அடிமை ...!
அடப் பாவி ..! என்பவன்
எனக்கு பகைமை ....!

கொடி என்பது
எனது உயிர் ...!
கோடி என்பது
ஒரு நாள் சம்பாத்தியம் ...!

பணம் என்பது என் வீட்டு
மாட்டுக்கும் பஞ்சு மெத்தை...!
மனம் என்பது
என்னவென்றே தெரியாது ...!
தினம் சொல்வது
பல பொய்கள் ....!
கனம் என்பது தலையில் மட்டும்
மக்களிடம் அல்ல ...!

பிறரை குறை சொல்லி
பிழைக்கும்
கோமாளிகள் நாங்கள் ....
எங்களை நம்பி
ஏமாறும்
ஏமாளிகள் மக்கள் ....!

இனியும் நம் உறவு
நாள் தோறும்
இனிக்க
இந்த
சாக்கடை காதலனின்
சங்கீத வாழ்த்துகள் ....!


( நேர்மையான அரசியல்வாதிகளுக்கு இந்த கவிதை பொருந்தாது .   எழுத தோன்றியது .. எழுதி விட்டேன் )

Related post



3 கருத்துகள்: