சனி, நவம்பர் 05, 2011

தூக்கம் வரவில்லையா - எளிய மருத்துவம்


நம்மில் அநேகர் சரியான தூக்கம் இல்லாமல் அவதி படுகிறோம் .  அப்படி சரியான தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை உபயோகித்து பார்க்கலாமே 



  1. இரவில் உணவருந்திய பின் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுங்கள் .  நிம்மதியாக தூங்கலாம் .
  2. வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிட தூக்கம் இல்லாமல் துன்பப்படும் நோய் குணமாகும் .   நரம்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.
  3. இரவில் தூக்கம் வரவில்லை என்றால் , கசகசாவை தூள் செய்து வைத்து கொண்டு படுக்க போகும் போது அதை பாலில் கலந்து சாப்பிடுங்கள் .  சுகமான தூக்கம் வரும் .
  4. இரவில் தூங்கும் முன் சூடான பசும்பாலில் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும் .  நியாபக சக்தி பெருகும் .
  5. தூங்கும் போது கண்டபடி தூங்க கூடாது .  பொதுவாக வலக்கை பழக்கமுள்ளவர்கள் இடப்புறமாகவும் ,  இடக்கை பழக்கமுள்ளவர்கள் வலது புறமாகவும் திரும்பி படுக்க வேண்டும். 
  6. எந்த கரங்களுக்கு வேலை மிகுதியோ அந்த கரம் மேலே இருக்கும் படி படுத்து தூங்கினால் தான் சரியான ஒய்வு கிடைக்கும் . 
  7. இரவில் படுக்கும் முன் இரண்டு கால்களையும் நன்றாக அழுத்தி தேய்த்து விடுங்கள் .  நல்ல தூக்கம் வரும் .  புத்துணர்ச்சியும் கிடைக்கும் .
 டிஸ்கி :   யாருக்கும் கெடுதல் நினைக்காமல் ,  யாரையும் கெடுத்து பேசாமல் கடவுளுக்கு பயந்து வாழுங்கள் ..   நல்ல தூக்கம் வரும் .   செய்து தான் பார்ப்போமே ....

24 காரட் தங்க ஆடைகள் - இன்று ஒரு தகவல்


தங்கம்  என்று சொன்னாலே நிறைய பேருக்கு ஒரு கிக் தான் .  அதுவும் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம் .   தங்கம் மீதான மோகம் அமெரிக்க ,  ஐரோப்பிய நாடுகளை விட ஆசிய நாடுகளில் தான் அதிகம் உள்ளது என்கிறது ஒரு ஆய்வு .  இந்த சூழலில் தான் தங்கத்தில் ஆடைகளை (  கழுவக்கூடிய ) உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள் .


சுவிட்சேர்லண்டை சேர்ந்த பொறியாளர்கள் 10  வருடங்கள் உழைத்து இந்த தங்க ஆடையை உருவாக்கியுள்ளனர்.    ஆடையுடன் இப்படி தங்கத்தை இணைக்க முற்ப்பட்ட முயற்சி முதன்முறை அல்ல .   முன்னாள் ஆராய்ச்சியாளர்கள்,  பட்டு நூலுடன் வெள்ளியை  இணைக்க முறப்பட்டு மெல்லிய நூலை சுற்றிலும் வெள்ளியை போர்த்தி முயற்சி செய்தனர் .  இந்த முயற்சி எதிர்பார்த்த பலன் தரவில்லை எனினும் தங்க ஆடை உருவாக்குவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது எனலாம்.

 பிளாஸ்மா கோட்டிங் முறையை பயன்படுத்தி இந்த தங்க ஆடைகள் உற்பத்தி செய்யப்படுமாம் .   இந்த தங்க ஆடைகள் முழுவதும் தண்ணீரால் கழுவப்படும் சக்தி கொண்டதாக இருப்பது அதன் சிறப்பு .

 இதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் ,  தங்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தற்பொழுது 8 கிராம் சுத்த தங்கத்தில்   தங்க கழுத்து பட்டையை         ( Golden Neck Tie ) உருவாக்கி உள்ளார்கள் எனவும் அதின் விலை 7500 ஸ்விஸ் பிரான்க்  ( கிட்டத்தட்ட 8500  டாலர்  , அதாவது சுமார் 425000 ரூபாய் ) மட்டும் தான் .

டிஸ்கி :  இந்த செய்தியை எழுதும் போதே நீங்கள் இப்பொழுது என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்கு தெரிகிறது .

  1. 425000 ரூபாய்க்கு ஒரு டை வாங்குவதை விட 20 பவனுக்கு நகை வாங்கி விடுவோம் ..... உண்மை தானே
  2. நிறைய பேர் தன் கல்யாணத்திற்கு மாமனார் வீட்டில் வரதட்சிணையாக கேட்கலாம் ....  உண்மை தான் .   வரதட்சினை கொடுமையில் கேசு போட்டுட்டாங்கன்னா .... இந்த இடுகையும் நானும் பொறுப்பாக முடியாது .  ஹி  .... ஹி.....
  3. ஏம்பா ....! இது கொஞ்சம் ஓவரா இல்ல .....  நானும் உங்க கட்சி தான் ...

வெள்ளி, நவம்பர் 04, 2011

ஒற்றை சக்கரத்தில் போவோம் பயணம் - இன்று ஒரு தகவல்


பைக் என்று சொன்னாலே குறைந்தது இரண்டு சக்கரம் இருக்கும் என்று நமக்கு தெரியும் .   ஒற்றை சக்கரம் உள்ள பைககுகள் மிக குறைந்த எடையும் , மிக எளிதில் செயல்படும் திறனும் உள்ளதால் , இந்த ஒற்றை சக்கர பைக்கை குறித்த சிறிய தகவலை நாம் பார்க்கலாம் .


RYNO என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஒற்றை சக்கர வாகனம் மின்சக்தியை கொண்டு ஓடக்கூடியது.   அதிகபட்சமாக 40 கிமீ /  மணி வேகத்தில் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது .   இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள லிதியம் அயன் பாஸ்பேட் பாட்டரி 1 மணி 30  நிமிடங்களுக்குள் முழுவதும் சார்ஜ் செய்யக்கூடிய அளவில் உள்ளது .   




57  கிலோ எடையுடைய ஒரு எளிய வாகனம் தான் இது .   நெடுந்தொலைவுக்கு பயன்படாமல் ,  குறுகிய பயணத்திற்கு இந்த வாகனம் சிறந்தது .   அடுத்த ஆண்டில் விற்ப்பனைக்கு வரவுள்ள இந்த வாகனத்தின் விலை 3500 டாலர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

டிஸ்கி :  பிறகு என்ன ..?  டக்குன்னு ஒரு வண்டிக்கு ஆர்டர் கொடுங்க ... பக்கத்திலே இருக்கிற கடைக்கு போய் பந்தாவா எறங்குங்க .....  பாத்துங்க ... வண்டியை கொஞ்சம் கவனமா ஓட்டனும் ...  ஹீரோ ஆக ஆசைப்பட்டு காமடியன் ஆகி விடக்கூடாது ...   ஹி ... ஹி.. 

வியாழன், நவம்பர் 03, 2011

புகை பிடிப்பவரா நீங்கள் .....? இதை கொஞ்சம் பாருங்கள்


புகை பிடிக்கும் பழக்கம் 3000  வருடங்களுக்கு முன்பாகவே இந்த உலகில் தோன்றி உள்ளது என் ஆய்வுகள் தெரிவிக்கின்றன .   இன்றைய உலகில் புகை பிடிப்பது ஒரு ஸ்டைலான காரியமாக மாறி உள்ளது .  டென்ஷன்  ஆனால் தான் புகை பிடிக்கிறோம் என அநேகர் சாக்கு சொல்லுகிற போது   அநேகம் இளைஞர்கள் .., ஏன் மாணவர்கள் கூட புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்  என்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது .  உண்மையில் இந்த புகை பிடிப்பதால் வருகிற காரியங்களை கொஞ்சம் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது .


சிகரட்கள் கிட்டத்தட்ட 4000  வேதிபொருட்களை கொண்டுள்ளது அவற்றில் 100 க்கும் மேற்பட்ட நச்சு பொருட்கள் உள்ளன என்பது கொஞ்சம் அதிர்ச்சி கலந்த உண்மை .  தகவலுக்கு :  http://quitsmoking.about.com/od/chemicalsinsmoke/a/chemicalshub.htm .   சிகரெட்டில் கலந்துள்ள பொருட்களை அறிந்து கொள்ள கொஞ்சம்  http://quitsmoking.about.com/cs/nicotineinhaler/a/cigingredients.htm பாருங்கள் .
  
  1. சிகரெட்டில் உள்ள நிகோட்டின் புகையை உள் இழுக்க ஆரம்பித்த 10 வினாடிகளுக்குள் மூளையை சென்று அடைந்து விடும் .  இது உடலின் எல்லா பகுதிகளிலும் கலந்து இருக்கும் .   புகை பிடிக்கும் பெண்களின் தாய்ப்பாலில் கூட இந்த நச்சு இருக்குமாம் .
  2. சிகரெட்டில் உள்ள கார்பன் monaxide  ரத்த சிவப்பணுக்களின் ஹீமோ க்ளோபினை பாதித்து உடலுக்கு தேவையான ஆக்சிஜென் கிடைக்காமல் செய்து விடும் .
  3. சிகரெட்டில் உள்ள கான்சர் உருவாக்கும் நச்சு பொருட்கள் ,  செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முக்கியமான ஜீன்களை பாதித்து  அவற்றின் மூலம் ஒழுங்கற்ற செல் வளர்ச்சி உண்டாகி கான்சர் உருவாகிறது .
  4. புகை பிடிப்பதினால் சுவாச மண்டலம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது .
  5. சேதமடைந்த செல்களை சரி செய்யும் antioxidants அளவு ரத்தத்தில் புகை பிடிப்பதின் மூலம் குறைகிறது .
  6. புகை பிடிப்பவர் தனக்கு மட்டும் அல்லாமல் தன அருகில் நிற்ப்பவருக்கும் இதே பாதிப்பை ஏற்ப்படுதுகிறார் .


இத்தனை பாதிப்புகளை ஏற்ப்படுத்தும் இந்த புகை பழக்கத்திற்கு எதிராக கடுமையான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த சமுதாயம் உள்ளது .   என்ன தான் சொன்னாலும் சம்பந்தப்பட்ட நீங்கள் முடிவு எடுத்தால் தான் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடிகோல முடியும் .


டிஸ்கி :  இந்த கட்டுரையை எழுதும் போது எனக்கு  இரண்டு காரியங்கள் நியாபகத்திற்கு வருகிறது .

  1. கடவுள் மனிதன் புகை பிடிக்க வேண்டும் என நினைத்திருந்தால் அவனது மூக்கு தலைக்கு மேலே புகை போக்கி போல வைத்திருக்கலாம் .
  2. ஒரு சிகரெட்டின் அளவு குறைய குறைய அதை புகைப்பவரின் ஆயுளும் குறைந்து கொண்டிருக்கிறது .

ஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இன்று ஒரு தகவல்


நம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அஜீரண கோளாறுகளால் கஷ்டப்படுவதை அறிந்திருக்கிறோம் .  இதற்காகவே பல மருந்துகளை மருந்து கம்பனிகள் தயாரித்தும் வருகின்றன .  ஆனால் இந்த மாதிரியான அஜீரண கோளாறுகள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை பயன்படுத்தினால்  நீங்கி நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம் .



விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணம் ,  பசியின்மை ,  வயிறு உப்பி காணப்படுதல் ,  உடல் வலி , அசதி  முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் சிறந்தது .    2  பெரிய சுக்கு ,  2  ஏலக்காய் இவற்றை நசுக்கி கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து , 2  டம்ளர் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து ,  முக்கால் தம்ளராக சுண்டியவுடன் கருப்பட்டி ( பனை வெல்லம் ) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலந்து குடித்து வந்தால் அணைத்து அஜீரண கோளாறுகளும் நீங்கி உடம்பு கலகலப்பாக இருக்கும் .  


ஓமம்  -  200 கிராம்  ,  சீரகம்  -  100  கிராம் ,  மிளகு  -  100  கிராம் ,  கருஞ்சீரகம் -  100  கிராம் ,  பூண்டு  - 50  கிராம் ,  கறிவேப்பிலை - 100  கிராம் ,  தோல் நீக்கிய சுக்கு -  200  கிராம் ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில் வரித்து பொடி செய்து  தினசரி பகல் உணவில் 2  ஸ்பூன் 1  பிடி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர செரிமானம் நல்ல நிலையில் ஆகி வயிற்று கோளாறு இன்றி சுகமாக இருக்கலாம் .  


தினசரி 4  பேரீச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கடுப்பு ,  அஜீரண பேதி , மலசிக்கல்  போன்ற வயிற்று கோளாறுகள் வருவதில்லை .  


சுக்கு பொடியுடன் சுடு நீரை சேர்த்து குடித்தாலும் அஜீரணத்தில் இருந்து நல்ல சுகம் கிடைக்கும் .


நன்றி : குலசை சுல்தான்

புதன், நவம்பர் 02, 2011

சைக்கிள் ஓட்டுங்க - சார்ஜ் பண்ணுங்க - இன்று ஒரு தகவல்


சைக்கிள் என்ற வாகனத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது .  சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று வரை விரும்பி ஓட்டும் ஒரு வாகனம் என்றால் அது சைக்கிள் தான் .  சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத இந்த வாகனங்களின் எண்ணிகை தற்பொழுது குறைந்து வந்தாலும் ,  சைக்கிள் ஓட்டுவதின் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று மார் தட்டுகின்றனர் ஜெர்மனியை சேர்ந்த சில்வர் பக் கம்பெனி . 


Starke 1 மற்றும் Stark 2 என்ற 2  மாடல்களில் இந்த நிறுவனம் சைக்கிள்களை தயாரித்துள்ளது.   இந்த சைக்கிள் உடன் ஒவ்வொரு USB Port இணைக்கப்பட்டுள்ளது .   இந்த சைக்கிள் ஓட்டப்படும் பொழுது Dynamo வில் உருவாகும் மின்சாரம் இந்த போர்ட் வழியாக மொபைல் போன் மற்றும் MP3 பிளேயர் போன்றவற்றை சார்ஜ் செய்ய பயன்படுத்தலாம் .   அட ...!

Stark 1 மாடல் 12 . 5  கிலோ எடையும்  , Stark 2 மாடல் 11 . 9  கிலோ எடையும் உள்ளதாக கிடைக்கிறதாம் .    இந்த Stark 1 மாடல் சைக்கிள் 1 . 5 மணி நேரம்  ( 32 கிலோ மீட்டர் ) இயங்கத்தக்க ஒரு மின் மோட்டார் ஒன்றும் உள்ளதாம் . 

 
டிஸ்கி :  எப்படியோ ... எல்லா வழிகளிலும் மின்சாரம் தயாரிக்க கண்டுபிடித்து கொண்டு இருக்கிறார்கள் .   புதிய அறிமுகங்களை நாம் எதிர்பார்த்து காத்திருப்போம் .

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

உலகின் அதிவேக மோட்டார் பைக்ஸ் - இன்று ஒரு தகவல்


என்னதான் பல வகையான கார்கள் வந்திருந்தாலும் ,  மோட்டார் பைகில ஏறி அதிவேகத்தில பறந்து போகிற சுகமே தனிதான் என்பது அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும் .  அப்படி மோட்டார் பைக் வைத்திருக்கிற அநேகர் கார் வாங்காமல் இன்னும் பைக்கில் பறந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .  அவர்களுக்காக ,  உலகின் அதிவேக மோட்டார் பைக் குறித்த ஒரு தொகுப்பை காணலாம் .



ஐந்தாவது இடம் :   Kawasaki Ninja ZX-14 

 DOHC என்ஜின் தொழில் நுட்பத்தை கொண்டுள்ள இந்த பைக் 1352 CC  என்ஜினை கொண்டுள்ளது.   190 bhp  சக்தியை இந்த இஞ்சின் வெளியிடுகிறது.  அதிகபட்சமாக 190 மைல் / மணி வேகத்தில் இந்த பைக்கில் செல்லமுடியும் .   இதனுடைய விலை 9 ,50 ,000 ரூபாய் மட்டும் தான். 


 நான்காவது இடம் :   Suzuki Hayabusa 


197 bhp  சக்தியை வெளியிடும் 1349 CC இன்ஜினை இந்த பைக் கொண்டுள்ளது.    அதிகபட்சமாக 200 மைல் /  மணி வேகத்தில் இந்த பைக்கில் பறக்கலாம் .   இந்த பைக்கின் விலை 14 ,30 ,000 ரூபாய் மட்டும் தான் . 


மூன்றாவது இடம் :   MTT Turbine Superbike (Y2K Superbike)  

320 bhp  சக்தி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் டர்பைன் இன்ஜினை இந்த பைக் கொண்டுள்ளது .   அதிகபட்சமாக 230 மைல் /  மணி வேகத்தில் இந்த பைக்கில் பறக்கலாம.   இந்த பைக்கின் விலை 1 ,75 ,000 டாலர் மட்டும் தான் ( அதாவது கிட்டத்தட்ட 87 லட்சம் ருபாய் மட்டும் தான் )


இரண்டாவது இடம்  : MTT Streefighter 


டர்பைன் இஞ்சின் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் இந்த பைக்கின் சக்தி 420 bhp .  அதிகபட்சமாக 250 மைல் / மணி வேகத்தில் இந்த பைக் பறக்குமாம் .   இதனுடைய விலை 1 ,50 ,000 டாலர் மட்டும் தான் ( அதாவது கிட்டத்தட்ட 75   லட்சம் ருபாய் மட்டும் தான்)


முதல் இடம் :  Dodge Tomahawk  


500 bhp சக்தி கொண்ட வைப்பர் V10 இன்ஜினை கொண்டு இந்த பைக் இயங்குகிறது .   அதிகபட்சமாக 300 மைல் /  மணி வேகத்தில் பறக்கலாம் .   இதனுடைய விலை  5 ,55 ,000 டாலர் மட்டும் தான் ( அதாவது கிட்டத்தட்ட 2 கோடியே 75  லட்சம் ருபாய் மட்டும் தான் ) 


டிஸ்கி :  என்ன நண்பர்களே ..., இதில எந்த பைக்கை வாங்கலாம் என்று பிளான் பண்ணுறீங்க போல .    நாங்கலாம் இந்த ரூபாயில என்னவெல்லாமோ செய்துவிடுவோம் அப்படின்னு சொல்லுற கூட்டத்தில தான் நான் இருக்கேன் .