சனி, செப்டம்பர் 03, 2011

சாதி என்பதோர் வியாதி ....


"சாதிகள் இல்லையடி பாப்பா "
சொன்னவர் 
மறைந்தார் அன்றே ....!
சாதி வெறியை 
தூண்டியே வாழ்கிறார் 
சிலர் இன்றே ....!

சாதி சாதி என்று 
சாகும் மனிதா....
சாதியில் பிரிவு 
எப்படி பிரித்தாய் ..?

நீயும் நானும் 
வேறு சாதி என்றால் 
நம்மை படைத்த 
இறைவன் எந்த சாதி ....?
இறைவனுக்கு சாதி
இல்லையெனில் ...
எங்கிருந்து வந்தது 
இந்த வியாதி ....?

சாதி தருமா உயர்வு  ....?
சாதி தருமா வாழ்வு ....?
பின்
சாதியில் என்ன தாழ்வு ...?

ஆறடி குழிக்குள் அடங்கும்
ஆறறிவு மானுடா...
சாதி என்பதோர் வியாதி ...
சில மூர்க்கர்கள் செய்த சதி ....

சாதிகள் இல்லையென்று
சப்தமாய் கூறு........
முழங்கட்டும்  சமூகம்..
மனிதம் வாழ்கவென்று ....!

வியாழன், செப்டம்பர் 01, 2011

அற்புதமான பாலம் - அதிர வைக்கும் வடிவமைப்பு - இன்று ஒரு தகவல்

இத்தாலிய வடிவமைப்பாளர்கள் 3 பேர் சேர்ந்து ( பிரான்செஸ்கோ   கோலாரோச்சி , கியோவன்ன  சரசினோ  மற்றும்  லூசா  சரசினோ ) ஒரு பிரமாண்டமான பாலத்தை வடிவமைத்துள்ளார்கள். நிஜத்தில் இந்த கட்டுமானம் முடிவடைந்தால் , உலகம் போற்றும் பேரதிசயம் ஆகும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.


இந்த பிரமாண்டமான வடிவமைப்பு ஒரு பள்ளத்தாக்கின் மேல் கட்டப்படும் ஒரு பாலத்தின் மாதிரி. ஆனால் விசேஷம் என்னவெனில் பெரிய காற்று விசையாழிகள் ( WIND TURBINES ) , இதனுடைய தூண்களுக்கு நடுவே நிறுவப்பட்டிருக்கும். மிக உயரத்தில் இந்த பாலம் அமைய போகிறதால் , காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் அதன் மூலம் தேவையான அளவு மின்சாரம் தயாரிக்க முடியும் எனவும் கருதபடுகிறது.
 
இது மிகவும் நீண்ட பாலமாக இருக்க போகிறதால் , இதனுடைய சாலை முழுவதும் சூரிய ஒளி தகடுகளால் கூரை அமைக்கப்படும் எனவும் தெரிகிறது. இதன் மூலமும் மின்சாரம் பெருமளவில் தயாரிக்கப்படும்.  கூடுதலாக ஒரு சூரிய ஒளி பூங்காவும் இந்த பாலத்தில் பொழுதுபோக்கிற்காக அமைக்கபடுகிறது.
 

இந்த பாலம் மூலம் ஒரு வருடத்திற்கு சுமார் 40 மில்லியன் KWh  மின்சாரம் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

அற்புதமான பாலம் - அதிர வைக்கும் வடிவமைப்பு                                         - பசுமையான பள்ளத்தாக்கின் மேலே பசுமையான திட்டங்கள்

இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்

பெருகி வரும் நோய்கள் ஒரு பக்கம் , விபத்துகள் மறுபக்கம் ,  சாலைகளில் வேகமாக செல்லும் அவசர ஊர்திகள் , இவைகளை எல்லாம் பார்க்கும்போது மனித உயிர்கள் எதிர்கொள்ளுகிற  போராட்டங்களை அறிந்து கொள்ளமுடியும். இந்த மாதிரி சமயங்களில் இரத்த தானம் பல உயிர்களை காப்பாற்றுவதை நாம் அறிந்திருக்கிறோம். இதை பற்றி ஒரு சிறு கண்ணோட்டத்தை நாம் காண்போம்.
 
  • ஒரு புதியதாய் பிறந்த குழந்தைக்கு 1 கப் இரத்தம் காணப்படும்.
  • மனித உடலின் எடையில் 7% இரத்தத்தின் எடையாகும்.
  • பொதுவாக வயது வந்தவர்களுக்கு 10 Pint  ( 1 / 8  of  Gallon) அளவு இரத்தம் இருக்கும்.
  • நான்கு முக்கிய வகை இரத்தப்பிரிவுகள் உள்ளன. அவை "A ","B ","AB "  மற்றும் "O "  
  • ஒரு unit  இரத்தத்தை நாம் பல கூறுகளாக பிரிக்கமுடியும். அவை இரத்த சிவப்பணுக்கள் , இரத்த வெள்ளை அணுக்கள் , இரத்த தட்டுகள் ,  மற்றும் இரத்த பிளாஸ்மா .
  • இரத்த சிவப்பணுக்கள் உடலின் உறுப்புகளுக்கும் , திசுக்களுக்கும்  ஆக்சிஜனை சுமந்து செல்கிறது. 
  • ஓரிரு துளி இரத்தத்தில் கிட்டத்தட்ட 1 பில்லியன் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
  • தானம் செய்யப்பட்ட இரத்த சிவப்பணுக்கள் 42  நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்
  • இரத்த வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது.
  • இரத்த தட்டுகள் இரத்தம் உறைவதை ஊக்குவிக்கிறது .
  • தானம் செய்யப்பட்ட இரத்த தட்டுகள் 5  நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
  • இரத்த பிளாஸ்மா என்னபடுவது 90 % நீர் சத்து நிறைந்தது. மொத்த இரத்ததில் 55 % கொள்ளளவை கொண்டுள்ளது.
  • பிளாஸ்மாக்கள் உறைய வைக்கப்பட்டு 1 வருடம் வரை பயன்படுத்த கூடும்.
 மருத்துவமனைக்கு செல்லும் 10 நபர்களில் ஒருவருக்கு இரத்தம் தேவைபடுகிறது.  பல லட்சகணக்கான உயிர்கள் சரியான சமயத்தில் இரத்தம் கிடைக்காமல் மடிகின்றன. கொடிய தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 20 யூனிட் இரத்த தட்டுகள் தேவைபடுகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 120 யூனிட் இரத்த தட்டுகளும் 20 யூனிட் இரத்த சிவப்பணுக்களும் தேவைபடுகிறது.  இவையெல்லாம் ஒரு சிறு கணக்குகள் மாத்திரமே...

இரத்தம் தானம் செய்வதால் உடல் நலன் கேட்டு போகாது. குறைந்தது 17 வயது நிரம்பியவர்கள் தானம் செய்யலாம். திடகாத்திரமுள்ளவர்கள் 56 நாட்களுக்கு ஒரு முறை தானம் செய்யலாம். 17 % ஜனங்கள் இரத்த தானம் செய்வதை குறித்து நினைத்து கூட பார்க்கவில்லை என்கிறார்கள். 15 % ஜனங்கள் எங்களுக்கு சமயமில்லை என்கிறார்கள். 1 % ஜனங்கள் நாங்கள் மற்றவர்களை நேசிக்கிறோம் என்கிறார்கள். எங்கோ ஒரு மூலையில் ஒரு உயிர் இரத்ததிர்க்காய் ஏங்கி கொண்டிருக்க, நாம் ஏன் இருக்க முடியாது அந்த 1 % ல் .....



 
 

புதன், ஆகஸ்ட் 31, 2011

நவீன கண்டுபிடிப்புகள் - இன்று ஒரு தகவல்


JET  PACK என்ற நவீன கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமான ஒரு கண்டுபிடிப்புதற்கால உலகின் தலை சிறந்த 50  கண்டுபிடிப்புகளில் ஒன்றாக டைம்ஸ் பத்திரிகை இதை குறித்து எழுதியுள்ளது. (பக்கத்தில் காணப்படும் படத்தை பார்க்க)


இரட்டை இறகுகள் மற்றும் இயற்கை வாயுவை எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்த நவீன பறக்கும் இயந்திரத்தை களென் மார்டின் என்ற நியூசீலாந்து கண்டுபிடிப்பாளர் சுமார் 30 ஆண்டுகள் போராடி கண்டுபிடித்துள்ளார்.

இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால் இது  செங்குத்தாக  மேல கிளம்பி செங்குத்தாக இறங்கும் சக்தி வாய்ந்ததுதனி நபர் மாத்திரம் பயணிக்க முடியும். மிகவும் எடை குறைந்தது. சுமார் 2438 மீட்டர் (8000 அடி) உயரம் வரை பறக்கும் சக்தி படைத்தது. அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் ( 60 மைல் ) வேகத்தில் நாம் பயணிக்க முடியும். தொடர்ந்து 30 நிமிடங்கள் பயணிக்க முடியும். ஒரு சிறிய parachute இதனுடன் இணைக்கபட்டிருக்கிறது.

அவசரகால நடவடிக்கைகள், மீட்பு பணிகள் மற்றும் இராணுவத்தினால் இது மிகவும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பறக்கும் இயந்திரம் மிகவும் இலகு ரக விமான பிரிவில் வகைபடுத்தபட்டுள்ளதால், இதை இயக்குவதற்கு பல நாடுகளில் தனியாக உரிமம் பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் தேவையான அளவு பயிற்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வெகு விரைவில் இந்த பறக்கும் இயந்திரம் நமது தலைக்கு மேல் பறப்பதை நாம் பார்க்கலாம். இதனுடைய தற்போதைய விலை வெறும் 100000 டாலர் ( இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 47 லட்சம் ருபாய் ) மாத்திரமே.

இதை கண்டுபிடித்த அண்ணாச்சி மார்டினுக்கு ஒரு சலாம் போட்டுவிட்டுஉங்களுக்கு என்ன சொல்லவேண்டும் என்று தோன்றுகிறதோ அதை அப்படியே சொல்லலாமே....

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

பிரச்சனையை பார்ப்பதை காட்டிலும் தீர்வை பார்ப்பது மேலானது

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை குறித்து கேள்விபடாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதில் முதல் படியை அடைந்த நாசா நிறுவனத்திற்கு பெரிய சவாலான பிரச்சனை ஓன்று வந்தது.

அதாவது விண்வெளி வீரர்கள் எடுத்து சென்ற மை பேனாக்கள் விண்வெளியில் வேலை செய்யவில்லை. காரணம் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையின் காரணமாக மை பேனாவில் உள்ள மை காகிதத்தில் விழவில்லை. பத்தாண்டுகள் செலவழித்து , கிட்டத்தட்ட 12  மில்லியன் டாலர் செலவில் ஒரு புதிய பேனாவை கண்டுபிடித்தனர். அந்த பேனா தண்ணீருக்கு அடியிலும் எழுதும். உறைந்த பனியில் இருந்து 300  டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் எழுதும். நிச்சயமாக இது ஒரு பெரிய முயற்சி தான். அதற்காக அவர்கள் கொடுத்த விலையும் அதிகம்.
 
ஆனால் இதே சூழ்நிலை ரஷ்யாவில் ஏற்பட்டபோது , ரஷ்ய விண்வெளி வீரர்கள் மை பேனாக்களுக்கு பதிலாக பென்சில் பயன்படுத்தினார்கள். என்ன ஒரு எளிதான தீர்வு பாருங்கள்.
 
நண்பர்களே.., பொதுவாக இப்படி ஒரு வார்த்தை சொல்லுவார்கள். " ஒரு பிரச்சினைக்கு பல தீர்வுகள் உள்ளது ". ஆனால் பல வேளைகளில் நாம் தீர்வுகளை தேடுவதில்லை. பிரச்சினைகளை ஆழமாக அலசுகிறோம். அதினால் கிடைப்பது என்னவோ மனக்குழப்பமும் பணக்கஷ்டமும் தான். உங்கள் பிரச்சினைக்கு தீர்வு தொலைவில் அல்ல. அது உங்கள் பக்கத்தில் தான் உள்ளது. எனவே பிரச்சினையை பார்த்து அல்ல... தீர்வை நோக்கி ஓடுவோம். வெற்றியும் பெறுவோம் 

 
உங்களுக்கு இது பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாமே. பிடிக்கவில்லை என்றால் அதையும் எழுதலாமே..

நட்புடன் ...
உங்கள் நண்பன்