ஞாயிறு, நவம்பர் 20, 2011

பெரிய அலை மின் நிலையம் - இன்று ஒரு தகவல்


மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில்  , மின்சாரம் உற்பத்தி செய்யும் அணைத்து வழிகளையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அணைத்து நாடுகளும் முயன்று வரும் சூழலில் மிக பெரும் அலை மின் நிலையம் ஓன்று  பிரான்சின் கடல் பகுதியில் அமைக்கப்படுகிறது.



அயர்லாந்து வை தலைமையிடமாக கொண்ட Open Hydro என்ற நிறுவனம் இந்த அலை மின் நிலையத்தை நிறுவப்போகிறது.   850  டன் எடையுள்ள மிக பெரிய டர்பைன்கள் நான்கினை பிரான்சின் கடலில் பொறுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது .   இந்த டர்பைன்கள் ஒவ்வொன்றும் 2 MWe மின்சாரத்தை கொடுக்கும் சக்தி படைத்தவை .  


72  அடி விட்டமுள்ள இந்த டர்பைன்கள் கடலில் 115  அடி ஆழத்தில் நிறுவப்பட போகிறது .  2012 ம் ஆண்டில் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிற இந்த அலை மின் நிலையத்தின் மூலம் 4000  வீடுகளுக்கு தேவையான மின்சாரம் கொடுக்க முடியும் என நம்பப்படுகிறது ..

வெள்ளி, நவம்பர் 18, 2011

விலை வாசி குறையுமா ...? வாய்ப்பிருக்கிறதா ...?


இப்பொழுது எங்கே பார்த்தாலும் , எதை எடுத்தாலும் விலை அதிகமாகி கொண்டே தான் போகிறது .   எந்த பொருளும் விலை குறைந்த மாதிரி இல்லை என புலம்பும் அநேகரில் நானும் ஒருவன் .   ஒவ்வொரு முறை விலை கூடும் போதும் , விலைவாசியை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது என குற்றம் சொல்லுவோரும் உள்ளனர் .  உண்மையில் விலைவாசி குறையுமா ....? அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது டஜன் கேள்வி .

 ஒரு பொருளின் விலை எதை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் , அதன் தேவை ( Demand ) மற்றும் உற்பத்தியை ( Supply ) பொருத்தே.  ஒரு சின்ன உதாரணம் காண்போம் ..

10  பேருக்கு ஒரு நாள் அரிசி தேவை   -  10  கிலோ என்று வைத்து கொள்ளுவோம் .   ஆனால் 30  கிலோ அரிசி உற்பத்தி செய்கிறோம் என்றால் உற்பத்தியான அரிசி விற்பனை ஆகவேண்டும் ( விற்பனை ஆனால் தான் விற்றவனும் , உருவாக்கியவனும் சாப்பிடமுடியும் )  என்பதற்காக அதனுடைய விலை சற்றே குறைத்து விற்பனை செய்யப்படும் . 

ஆனால் அதே நேரத்தில் உற்பத்தி 5 கிலோ தான் என்று வைத்துக்கொள்ளுங்கள் .  அதனுடைய தேவை அதிகரிப்பதாலும் ,  உற்பத்தி குறைந்து இருப்பதினாலும் விலை அதிகமாகி விடும் . 


 இது ஒரு சின்ன உதாரணம் தான் .  மிக முக்கியமாக தேவை அதிகரிக்கிறது ஆனால் உற்பத்தி குறைகிறது .   இது தான் சாராம்சம் ...  சரி .. இதற்க்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போமே ..!

 மக்கள் தொகை பெருக்கம் :   


 இது ஒரு முக்கியமான காரணம் .   ஒவ்வொரு ஆண்டிலும் மக்கள் தொகை இந்தியாவில் பெருகி வருகிறது .  தற்பொழுது 121  கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை வெகு விரைவில் சீனாவை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .  ஒவ்வொரு குழந்தை பிறக்க பிறக்க தேவை அதிகமாகிறது என்று அர்த்தம் .  அதனால் தான் குழந்தை கட்டுப்பாட்டு முறைகள் அரசால் மக்கள் மத்தியில் போதிக்கப்பட்டு வருகிறது .  ஆனால் வழக்கம் போல நாம் அதை கண்டுகொள்வதில்லை என்பது வேறு விஷயம் .... 

 விவசாயத்தின் தேக்கம்  :  


நாட்டின் பல இடங்களில் விவசாயம் அழிந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் .  ஏன் எனில் விவசாயத்தினால் கிடைக்கும் வருமானம் போதாத காரணத்தினால் வேறு வேலைகளை தேடி விவசாயிகள் பயணமாகிறார்கள் .   அதனால் தான் அரசும் இயன்ற வரையில் இலவச மின்சாரம் , உர மானியம் என்றெல்லாம் பல கொடுக்கிறது .  காரணம் அப்படியாவது விவசாயம் அழியாமல் இருந்தால் உற்பத்தி பெருகுமே ...


ரியல் எஸ்டேட் மோகம்  :


தற்பொழுது நாட்டை பிடித்திருக்கும் மிகப் பெரிய பகைமை இது தான் .   வீடு கட்ட இடம் என்ற நிலை போய் ,  நிலம் வாங்கி விற்பது ஒரு தொழிலாய் மாறின பிறகு , என்னமோ அழிவது எல்லாம் விளை நிலங்கள் தான் .   அதில் தான் நல்ல தண்ணீர் , பசுமை இருப்பதால் விளை நிலங்கள் அழிக்கப்படுகின்றன.  மறைமுகமாக உற்பத்தி அழிக்கப்படுகின்றன ...  


 சர்வதேச சந்தையில் எரிபொருளின் ஏற்ற / இறக்கங்கள் :
நமது எரிபொருள் தேவை சர்வதேச சந்தையை நம்பி இருக்கிற படியால் , எரிபொருள் விலை உயருகிற பொழுது , அதனோடு கூட சேர்ந்து அது சம்பந்தப்பட்ட விலையும் உயர்கிறது . 

நாம் என்ன செய்யலாம்  :-
  1. கூடுமானவரை ..... நாம் இருவர் ...நமக்கு ஒருவர் .....! சரி பரவாயில்லை நமக்கு இருவர் ....
  2. விவசாய நிலம் இருக்குமானால் தலையே போனாலும் விற்பனை செய்ய வேண்டாமே ... ஏதாவது விவசாயம் நடக்கட்டும் .
  3. ரியல் எஸ்டேட் தொழிலை ஆதரிக்கும் வகையில் அதிக நிலங்கள் வேண்டாமே ...
 டிஸ்கி :  இன்னும் சில வருடங்களில் விலை பட்டியல் ...
ஒரு லிட்டர் பெட்ரோல்         -    250  ருபாய் .
ஒரு கிலோ அரிசி                    -      100  ருபாய்
ஒரு கிலோ உப்பு                     -        50   ருபாய்  ( இது கூடவா ..!)


செவ்வாய், நவம்பர் 15, 2011

டெங்கு... டெங்கு .... கவனம் ...கவனம்


டெங்கு என்ற பெயரை கேள்விப்படாதவர் யாரும் இருக்க முடியாது என்பது எனது எண்ணம் .   மிக மோசமான இந்த காய்ச்சல் மனித உயிர்களை அள்ளி செல்லும் வல்லமை படைத்தது .  இப்பொழுதும் ஆங்காங்கு டெங்கு அறிகுறி தோன்றுவதால் , இந்த டெங்கு காய்ச்சல் குறித்து சில காரியங்களை நாம் காணலாம் .


டெங்கு காய்ச்சல் ஒரு வைரஸ் குடும்பத்தினால் பரவுகிற காய்ச்சல் .  இந்த வைரஸ்கள் கொசுக்களின் மூலமாக பரவுகின்றன ..

 டெங்குவின் அறிகுறிகள்  :

  1. தலை வலி
  2. காய்ச்சல்
  3. முழு சோர்வு
  4. மூட்டுகளில் மற்றும் தசைகளில்  கடுமையான வலி
  5. சுரப்பிகளில் வீக்கம்
  6. குமட்டல் மற்றும் வாந்தி

 டெங்கு காய்ச்சலுக்கு எந்த மருந்தும் கிடையாது என்பது தான் உண்மை .   ஆனால் டெங்கு காய்ச்சலின் மூலம் வருகிற அறிகுறிகளான வியாதிகளுக்கு தான் மருந்துகள் தரப்படுகிறது.


கடுமையான வயிற்று போக்கு டெங்கு காய்ச்சலின் உச்சம் .  

டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது நமது கரங்களில் தான் இருக்கிறது .  அண்ணன் கொசு நமது வீட்டிற்குள் நுழையக்கூடாது . அவ்வளவு தான் .... அதற்க்கு சில காரியங்களை செய்யலாமே ....

  1. தேங்கி நிற்கும் தண்ணீரை சுத்தம் செய்தல்
  2. குப்பைகளுக்கு குட்பை சொல்லுதல்
  3. வீட்டினுள் துணி மணிகளை மடித்து பெட்டிகளில் வைத்தல்
  4. தூங்கும் போது கொசு வலைகளை பயன்படுத்தல் ..

 டெங்கு ஒரு உயிர்க்கொல்லி தான் ... ஆனால் பாதுகாப்பாயிருந்தால் சுகமான வாழ்வு நிச்சயம் உண்டு

டிஸ்கி :  டெங்குக்கு அடிப்போம் சாவு மணி ......! 


திங்கள், நவம்பர் 14, 2011

குடி மகன்கள் கொஞ்சம் கவனிக்க ....



நாளுக்கு நாள் குடிமகன்களின்  ( Citizen ) எண்ணிக்கை கூடி வருகிறது போல குடி மகன்களின் ( Drunkards )  எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது .  சிறு வயதினர் ஏதோ  ஜாலிக்காக ஆரம்பிக்க போய் , இப்பொழுது துக்கம் , சந்தோசம் எல்லாவற்றிலும் குடி முக்கியத்துவம் பெறுகிறது .   குடி குடியை கெடுக்கும் என்பது நமக்கு நன்கு தெரிந்தது தான் ஆனால் குடி உங்களையே அழிக்கும் என்பதை நாம் கொஞ்சம் பார்க்கலாம் .
 
 
 
 குடி மகன்களின் / குடி மகள்களின் மூளை பாதிக்கப்படுமாம் .  இதனால் மன நிலை பாதிக்கப்படுவதுடன் ,  நியாபக சக்தியும் குறையுமாம் .   65  சதவீத தற்கொலைகள் அதிகப்படியான குடியினால் நிகழ்வதாகவும் ,   மூன்றில் ஒரு பங்கு இல வயதினர் குடியினால் தங்களை அளித்து கொள்வதாகவும் ஒரு ஆய்வு சொல்லுகிறது .

அதிகபடியாக குடிக்கும் குடிமகன்களுக்கு இலவச இணைப்பாக வாய் மற்றும் தொண்டையில் கேன்சர் வருவதற்கு வாய்ப்புள்ளது .  பெண்களுக்கு மார்பக புற்று நோய்கள் தாக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது .

குடிமகன்கள் குடியினால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு வந்து உடனடியாக சொர்க்கத்திற்கு போகும் வாய்ப்பும் உள்ளது .

அதிகப்படியாக குடித்தால் நுரையீரல் பாதிக்கப்படும் .   குடித்த பின் வாந்தி எடுத்தால் , அந்த வாந்தி நுரை ஈரலில் சிக்கி அபாய நிலைக்கும் கொண்டு போகும் .

வயிற்று பகுதியில் அல்சர் உருவாகி அங்கும் கேன்சர் உருவாகும் வாய்ப்பு உள்ளது 
 
மேலும் கிட்னி , எலும்புகள் , தோல்  எல்லாவற்றியும் பாதிக்குமாம்  
 
அட ...! இவ்வளவு விடயங்களா என்று நாம் யோசித்து கொண்டு இருக்கும் போதே ,  எத்தனயோ குடிமகன்கள் சாராய கடையின் வாசலில் தவம் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வலிக்க தான் செய்கிறது .
டிஸ்கி :  ஆமாம் இவ்வளவு விஷயம் இருக்கிறதே , பின் ஏன் அரசாங்கமே மதுவை விற்க வேண்டும் என்ற கேள்வியை நானே பல முறை கேட்டிருக்கிறேன் .  குடி குடியை கெடுக்கும் என்று பாட்டிலின் மேல் எழுதினாலும் குடி நாட்டிற்க்கும் வீட்டிற்கும் கேடு என்று வாசித்தாலும் கொஞ்சம் கூட அசராமல் தண்ணி அடித்து விட்டு அலப்பறை விடும் சகோ. களை பார்க்கும் போதும் ஒரு கேள்வி மாத்திரம் கேட்க தோன்றுகிறது ..."  நண்பா ....சாவதற்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாயே ..., ஒரு நாளாவது நீ வாழ்வதற்கு ரிஸ்க் எடுத்தது உண்டா ...?"


சனி, நவம்பர் 12, 2011

இன்னும் என்ன செய்ய போகிறோம் இவர்களுக்கு ...?


கல்வியின் ஆர்வம் / தாக்கம்  மாணவர்களிடம் பெருகியிருக்கிறதோ இல்லையோ ... பெற்றோர்களிடம் நிறைய பெருகியிருக்கிறது .  ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும் முன்பு பெற்றோர் படுகிற வேதனை மிக கடுமையானது என்றால் அது மிகையல்ல .   எப்படியாவது தான் சாதிக்க முடியாததை தன் பிள்ளைகள் சாதித்து விட வேண்டும் என்று அவர்கள் எடுக்கிற பிரயாசங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல .  ஆனால் நன்மைக்காக எடுக்கப்படுகிற அந்த பிரயாசங்கள் எங்கோ ஒரு மூலையில் சின்ன உள்ளங்களை வேதனை படுத்துகிறது என்பது பல மடங்கு உண்மை .



 அதிகாலையிலே பிள்ளைகள் தட்டி எழுப்பப்பட்டு படிக்க வைக்கப்படுகிறார்கள் .  சரியான தூக்கம் இல்லாமல் தவிக்கும் பிள்ளைகள் தூங்கவும் முடியாமல் படிக்கவும் முடியாமல் திணறுவதை கவனிக்க பெற்றோருக்கு முடிவதில்லை .  கொஞ்சம் பெரிய பிள்ளைகள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் டியூஷன் அனுப்பப்படுகிறார்கள் .

அதிகாலை படிப்பை முடித்து தன்னுடைய எடையை போல எடையை கூலிகள் போல பிள்ளைகள் தூக்கி கொண்டு போவதை பெற்றோர்கள் பெருமையாக பார்த்து கொண்டிருக்க பிள்ளைகளின் முதுகு சுமையினால் நிறைந்து வேதனை தருகிறதையும் யாரும் கவனிப்பதில்லை .

 சாயங்காலம் வரை பள்ளியில் பாடம் படித்து வீட்டிற்கு களைத்து வரும் பிள்ளைகள் பேசக்கூட நேரம் இல்லாமல் ஒரு காபி குடித்துவிட்டு டியூஷன் அனுப்ப இல்லை துரத்தப்படுகிறார்கள் .  

 இரவு எட்டு மணிக்கு திரும்பும் பிள்ளைகள் உணவிற்கு பின்பும் படிக்கும் படி அறிவுறுத்த / வற்புறுத்த படுகிறார்கள் .  கொடுமை தாங்காமல் புத்தகத்தை எடுக்கும் பிள்ளைகள் அப்படியே தூங்குவதும் நாம் பல இடங்களில் காணலாம.


மீண்டும் காலை 5  மணி ..   எல்லாம் சரி தான் . விடுமுறை நாட்களிலாவது கொஞ்சம் ஓய்வு என்றால் அன்றும் சிறப்பு வகுப்புகள் மற்றும் கணிப்பொறி பயிற்சி மற்றும் பிற ...
இவை எல்லாம் செய்து முடிக்க பெற்றோர் எடுக்கும் முயற்சிகளும் அவர்கள் செலவழிக்கும் பணமும் எப்படியாவது தன் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று தான் எண்ணப்படுகின்றன .  ஆனால் சில எதிர்மறையான விளைவுகள் நம் பிள்ளைகள் வாழ்வில் ஏற்ப்படும் என்பதை நாம் மறந்து போக கூடாது .


பெற்றோர் பிள்ளைகளுடன் அமர்ந்து பேசி சிரித்து விளையாடும் நாட்கள் போய் பாடத்தில் இருந்து கேள்வி கேட்கும் நாட்கள் பெருகி உள்ளதால் , பெற்றோரை விட்டு மனதளவில் பிள்ளைகள் பிரிய நேரிடும் .

எப்பொழுதும் படிப்பு படிப்பு என்று இருப்பதால் உடல் நிலையும் ,  மன நிலையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது 


பெற்றோருடன் அதிக நேரம் செலவழிக்க முடியாததால் தான் பிள்ளைகள் வளரும் போது அன்பு , குடும்பம் , விட்டு கொடுத்தல் என்பவைகள் குறித்த அறிவு இல்லாமல் அதிக அளவில் அவர்கள் திருமண வாழ்வில் கூட பிரிவுகள் நேர்கிறது .

எல்லாமே .. என் பிள்ளைக்காக தானே என்று நீங்கள் சொன்னாலும்  , உங்கள் பிள்ளை படிப்பில் முதல் இடம் பிடிப்பதை விட வாழ்வில் முதல் இடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள் .  இன்னும் என்ன செய்ய போகிறோம் இந்த சின்ன இதயங்களுக்கு ...?
 

டிஸ்கி :  படிப்பிற்கு முக்கியம் கொடுங்கள் .  தப்பில்லை ஆனால் அதைவிட உங்கள் பிள்ளைகளின் உணர்வுக்கு முக்கியம் கொடுங்கள் .  ஏன் எனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ...
 

வியாழன், நவம்பர் 10, 2011

அதி நவீன காற்றாலை - இன்று ஒரு தகவல்


காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழி மிகவும் சுற்று சூழலுக்கு உகந்தது என்றாலும் அதிகப்படியான காற்றோ ( சூறாவளி / புயல் )  அல்லது குறைந்த காற்றோ இருக்கும் போது அவைகளின் இயக்கம் நிறுத்தப்படுகிறது .  இந்த சூழ்நிலையில் தான் அதிநவீன காற்றாலை ஒன்றை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர் .



70  அடி உயரமுள்ள இந்த காற்றாலைகள் 21  அடி விட்டமுள்ள நவீன வட்ட வடிவ இறக்கையை தாங்கி நிற்கிறது .  அதி வேக காற்று வீசும் போது இந்த வடிவமைப்பு தானாகவே செங்குத்தான நிலையில் இருந்து காற்றின் போக்கில் மாறி விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .   மணிக்கு 118 மைல் வேகத்தில் காற்று வீசினாலும் இந்த காற்றாலைகள் தாங்கும் சக்தி கொண்டது 


குறைந்த பட்சமாக மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றிலும் இது இயங்கும் .   வருடத்திற்கு கிட்டத்தட்ட 18000 கிலோ வாட் ( 18 மெகா வாட் )  லிருந்து 30000 கிலோ வாட் ( 30 மெகா வாட் ) வரைக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது .


 டிஸ்கி : பசுமையான மின்சாரம் கொடுக்கும் பசுமையான திட்டம் .   வருக ... வெல்க ...

புதன், நவம்பர் 09, 2011

இந்தியாவின் இணையதள பயனர்கள் 100 மில்லியன் தாண்டியது - ஒரு தகவல்


 இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை வேகமாக உலகம் எங்கும் வளர்ந்து வருகிறது .   இந்த அசூர வளாச்சி இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது .   இதன் விளைவாக இந்தியாவின் மொத்த இன்டர்நெட் பயனர்கள் 112  மில்லியன்  ( செப்டம்பர் முடிவில் ) எனக் கணக்கிடப்பட்டுள்ளது .


 உலகம் முழுவதிலும் இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்களில் சீனா முதல் இடத்திலும்  ( 485 மில்லியன் ) ,  அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் ( 245 மில்லியன் ), தற்பொழுது இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது .   2013 ம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவை முந்தி முதல் இடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .  அட ...!

ஒவ்வொரு மாதத்திலும்  இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 5  முதல் 7  மில்லியன் அதிகமாகி வருகிறது என கணக்கிடப்பட்டுள்ளது .   அடுத்த 5  வருடங்களில் இந்தியாவின் மொத்த இணையப் பயனர்கள் 600 மில்லியன் யை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .  2015 ம் வருடத்தில் இணையத்தின் மூலம் சுமார் 20 பில்லியன் ரூபாய் அளவுக்கு இந்தியாவில் வியாபாரம் நடக்கும் என Associated Chambers of Commerce and Industry of India கூறியிருப்பது கூடுதல் தகவல் .
  

டிஸ்கி  :  உன்னை போல வேலை வெட்டி இல்லாமல் ப்ளாக் எழுதுகிறவர்கள் இருக்கும் போது 600  மில்லியன் என்ன 1000 மில்லியன் கூட இந்தியா தாண்டும் ..அப்படின்னு என்னை அன்போடு திட்டுகிற அன்பு நெஞ்சங்களுக்கு நான் சொல்லும் தகவல் என்னவென்றால் " இணையத்தை நன்கு பயன்படுத்துங்கள் ..  ஆனால்  நல்லதை மட்டும் பாருங்கள்  , நல்லதை மட்டும் கேளுங்கள் , நல்லதை மட்டும் பிறர்க்கு சொல்லுங்கள் "


செவ்வாய், நவம்பர் 08, 2011

தீ பற்றி கொண்டால் ... என்ன செய்ய வேண்டும் ..? - இன்று ஒரு தகவல்


நெருப்பு /  தீ பயன்படுத்தாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம் .  வீடுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் பல விபத்துகள் நெருப்பு மூலம் ஏற்ப்படுகிறது .  அப்படி ஏற்ப்பட்டால் என்ன எப்படி அந்த நெருப்பை அணைக்கவேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சம் ..


நெருப்பு என்றால் என்ன .?
வேகமாக ஆக்சிஜனேற்றம் பெற்று வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடும் தொடர் வேதி வினை தான் நெருப்பு என்று அழைக்கப்படுகிறது .   நெருப்பு என்பது நான்கு காரணிகள் உள்ளடக்கியது . 
  1. வெப்பம்
  2. ஆக்சிஜென்
  3. எரிபொருள்
  4. தொடர்வினை
மேற்கண்ட இந்த நான்கு காரணிகள் தான் நெருப்பை உண்டாக்குகின்றன .  அதனால் நெருப்பினால் ஆபத்துகள் உண்டாகும் போது இந்த காரணிகளை நாம் கட்டுபடுத்தினால் நெருப்பை கட்டுப்படுத்தலாம் .


இந்த நெருப்பு 4  வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவையாவன
  1. Class A நெருப்பு
  2. Class B நெருப்பு
  3. Class C நெருப்பு
  4. Class D நெருப்பு

 Class A தீ / நெருப்பு :

சாதாரணமாக பேப்பர்  ,  மரம் , துணி  போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது .  இந்த நெருப்பை அணைப்பதற்கு அந்த நெருப்பின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நெருப்பின் மீது நன்கு தண்ணீர் ஊற்றவேண்டும் .   தண்ணீர் வெப்பம் என்ற காரணியை எரிபொருளில் இருந்து நீக்கி விடுவதால் தொடர்வினை கட்டுக்குள் வருகிறது .  எனவே நெருப்பு அணைக்கப்படுகிறது .   இந்த மாதிரி நெருப்பை அணைப்பதற்கு Class A தீ அனைப்பான்களை ( Class A Fire Extinguishers )  பயன்படுத்தலாம் .


Class B தீ / நெருப்பு : 

எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது .   இந்த மாதிரி நெருப்பு ஏற்ப்படும் பொழுது சில சமயங்களில் முதல வகுப்பு தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தினது போல அநேகர் செய்கின்றனர் .  ஆனால் அது தவறான நடவடிக்கை 


 இந்த மாதிரி தருணங்களில் தண்ணீரை பயன்படுத்தினால் தண்ணீரை விட அடர்த்தி குறைந்த எண்ணெய் தண்ணீரின் மேல் வந்து விடும் காரணத்தாலும்  , வெப்பத்தினால் தண்ணீர் ( H2O ) பிரிந்து ஆக்சிஜென் மூலக்கூறுகள் பிரிவதினாலும் ,  நெருப்பு அதிகமாகும் .   எனவே இந்த வகையான நெருப்பை அணைக்க  CO2 கியாஸ் அல்லது சோப்பு நுரை அதிக அளவில் பயன்படுத்தினால் , நெருப்பிற்கு தேவையான ஆக்சிஜென் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்வினை நிறுத்தப்படும் 


Class C தீ / நெருப்பு : 

 மின்சார தீ இந்த வகையில் வருகிறது .  இப்படி தீ ஏற்ப்பட்டால் முதலாவது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் .  அதற்கு பிறகு எரிகிற பொருளை பொருத்து அது Class A தீயா அல்லாத B தீயா எனபதை அறிந்து அதற்கேற்ற தீ அனைப்பானை பயன்படுத்த வேண்டும் .

Class D தீ / நெருப்பு :  

தொழிற்சாலைகளில் உள்ள சோடியம்  , பொட்டாசியம் ,  டைட்டானியம் போன்ற உலோகங்களில் ஏற்ப்படும் தீ இந்த வகையை சேர்ந்தது .   சோடியம் க்ளோரைட்  எனப்படும் உப்பு மற்றும் Dry Chemical Powder போன்ற அனைப்பான்களை பயன்படுத்தலாம் .    


டிஸ்கி  :  பொதுவாக தீ பிடித்தால் நீங்கள் கீழ்க்கண்ட காரியங்களை கடைபிடியுங்கள்
  1. பதட்டப்படாதீர்கள் .  பதறிய காரியம் சிதறும்
  2. தீ தீ என்று சத்தமிட்டு அனைவரையும் உஷார் செய்யுங்கள்
  3. தீ அணைக்க கூடிய அளவில் இருந்தால் அணைக்க முயற்சி  செய்யுங்கள்
  4. பெரும் தீ என்றால் தீ அணைப்பு நிலையத்திற்கு அழைப்பு கொடுத்து விட்டு அவர்கள் அந்த இடத்தை அடைவதற்கு தேவையான் வசதிகளை செய்து கொடுக்கலாம் .
  5. உயிருக்கு கேடு என்றால் தயவு செய்து இடத்தை காலி செய்யுங்கள் .    உங்கள் உயிருக்கு முன் உடமைகள் ஒன்றும் அல்ல.


தலை சுற்றலா ? - எளிய மருத்துவம்


தலை சுற்றல் வந்து விட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது .   மாறாக எப்பொழுதும் படுத்து தான் இருக்க முடியும் .   இப்படிப்பட்ட தலை சுற்றலுக்கு என்ன எளிய மருத்துவம் உள்ளது என்பதை நாம் காணலாம் .


 கொத்தமல்லி , கசகசா ,  பருத்திவிதை இம்மூன்றையும் சம அளவு எடுத்து தூள் செய்து இரண்டு பங்கு நாட்டு சர்க்கரை  சேர்த்து  காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை போட்டு வெந்நீர் குடிக்க தலைசுற்று  , கிறுகிறுப்பு நீங்கும் .


அடிக்கடி தலைசுற்றல் இருந்தால் ரத்த அழுத்தம் இருப்பதாக் அர்த்தம் .  முற்றிய இஞ்சியை நசுக்கி பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுங்கள் .  தலைசுற்றும் நிற்க்கும்.  ப்ளட் பிரசரும் குறையும் .

ஏலக்காயை எடுத்து அதை இடித்து பனை வெல்லம் கலந்து சாப்பிட்டால் தலை சுற்று சுகமாகும் .

 
பித்தத்தினால் தலை சுற்றலா ..?  ஒரு துண்டு இஞ்சி ,  1  ஸ்பூன் சீரகம் ,  1  ஸ்பூன் தனியா ,  இவற்றை மிக்சியில் நைசாக அரைத்து வடிகட்டி , லேசாக சுட வைத்து , தேன் அல்லது சர்க்கரை சேர்த்து 1  மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து சாப்பிட தலை சுற்றல் பிரச்சினை குணமாகும் .

வெளியில் போய் விட்டு வந்தால் கண்களை இருட்டி கொண்டு தளி சுற்றுவது போல இருக்கும் .  கொட்டை புளி  , ஒரு துண்டு வெல்லம் ,  ஒரு ஸ்பூன் சீரகம்  மூன்றையும் ஒன்றாக நசுக்கி , உருட்டி , வாயில் அடக்கி கொண்டு , கண்களை இறுக மூடிக்கொண்டு  படுத்து கொள்ளவும் . தலையணை கூடாது .   இந்த ரசம் தொண்டையில் இறங்க இறங்க தலை சுற்றலும் குறையும் .

டிஸ்கி  :   தொடர்ந்து தலை சுற்றல் இருந்து வந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது .   எதை குறித்தும் கவலைபடாதீர்கள் .   ரத்த அழுத்தம் கூடினால் தலை சுற்றல் வரும் .   இடுக்கண் வருங்கால் நகுக .... எப்பொழுது நினைவில் வைத்து கொள்ளுங்கள் .

நன்றி : குலசை சுல்தான்

திங்கள், நவம்பர் 07, 2011

பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு வீடு - இன்று ஒரு தகவல்


பிளாஸ்டிக் பாட்டிலின் பயன்பாடு உலகமெங்கும் பெருமளவில் வியாபித்து விட்ட நிலையில் ,  சத்தமில்லாமல் நைஜீரியாவில் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு ஒரு வீடி கட்டி இருக்கிறார்கள் . 


 நைஜீரியாவின் சாலைகளிலும் ,  நீர் ஆதாரங்களிலும் நிறைந்து இருந்த பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது .   58 Sqm ( 624 சதுர அடி ) யில் அமைந்துள்ள இந்த வீட்டில் இரண்டு படுக்கை அறைகள் உள்ளது .   பிளாஸ்டிக் பாட்டில்களின் உள்ளே மணல் நிரப்பும் போது கிடைக்கும்  கிட்டத்தட்ட 3 கிலோ எடையுள்ள பாட்டில்கள் இந்த வீடு கட்ட உபயோகப்படுத்தப்பட்டுள்ளது .  இரண்டு அடுக்குகளாக வைத்து இந்த பாட்டில்கள் சிமெண்ட் வைத்து கட்டப்பட்டுள்ளது .


 பல வண்ணங்களில் உள்ள பாட்டிலின் மூடிகள் வீட்டின் உட்புறத்தில் தெரியும் படி அமைக்கப்பட்டுள்ளதால் அலங்காரமான் உள்ளறைகளை காண முடிகிறது .   பூமி அதிர்ச்சி  ,  தீ போன்ற ஆபத்துகளில் இருந்து இந்த வீடு தப்பும் என்றும் 19 டிகிரி வெப்பம் மட்டும் வீட்டின் உள் காணப்படும் எனவும் இதை வடிவமித்தவர் தெரிவித்துள்ளார் .

 மண்ணில் வீசப்படும் இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகும் என்பதால் இவற்றை இப்படி பயன்படுத்துவது வரவேற்கப்பட வேண்டும் என்றும் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார் .  70  சதவீத வீட்டு வேலை முடிந்துள்ள நிலையில் 14000 பாட்டில்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறதாம் .   இந்த வீட்டின் மின்சார தேவை சூரிய ஒளியில் இருந்து சந்திக்கப்படும் எனவும் தெரிகிறது .  இந்த நிலையில் 200000 பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி நைஜீரியாவில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டவும் இதை வடிவமைத்தவர் தீர்மானித்துள்ளது ஒரு கூடுதல் தகவல் .

 டிஸ்கி :  அட ....! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க .....! எப்படியோ வீணாய் போகிறதை உருப்படியா பயன்படுத்தினா சரி தான் .

LPG பயன்படுத்துபவரா நீங்கள்? - கொஞ்சம் கவனியுங்கள்


விறகு வைத்து சமையல் செய்த காலம் மாறி போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் .   அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( லிஃஉஎபிஎட் Petroleum Gas )  தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது .   அப்படி LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை நாம் பார்க்கலாம் .



LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே  ,  அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் .  சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு .   கீழ் உள்ள படத்தை பாருங்கள் .



LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே  ,  அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் .  சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு .   கீழ் உள்ள படத்தை பாருங்கள் .

சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி  எழுதப்பட்டிருக்கும் .  இதில் 4  ஆங்கில எழுத்துகள் ( A , B , C , D ) என்று வரும் .  இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு ( மார்ச் வரை )  ,  இரண்டாம்  காலாண்டு ( ஜூன் வரை ) , மூன்றாம் காலாண்டு ( செப்டம்பர் வரை ) ,  நான்காம் காலாண்டு ( டிசம்பர் வரை ) என்று பொருள்படும் .  தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .

மேற்கண்ட படத்தின் படி ,  இந்த சிலிண்டர் டிசம்பர் 2013 வரை பயன்படுத்தமுடியும் .

பொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது .  ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டுபண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது .  அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது .  ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .

பொதுவாக LPG ,  சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால்  , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் .   அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் ( கசிவு ஏற்பட்டால் )  திறந்து வைப்பது நல்லது .


சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக ( vertically ) தான் வைக்க வேண்டும் .  படுக்க ( Horizontally ) வைக்க கூடாது .  அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி ( Like Rocket ) தள்ளப்படும் .  அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது .

டிஸ்கி :  பாதுகாப்போடு சமையல் செய்யுங்கள் .   நீங்கள் சுகமாய் இருந்தால் தான் சமையல் சுவைக்கும் .


ஞாயிறு, நவம்பர் 06, 2011

USB யில் இத்தனை பயன்பாடா ..? - இன்று ஒரு தகவல்


USB என்று அழைக்கப்படும் Universal Serial Bus கணிப்பொறியுடன் உபகரணங்களை இணைக்க உதவும் தொழில்நுட்பம் .  பெரும்பாலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் தகவல்களை சேமிக்கும் டிரைவ் பயன்படுத்துகிறோம் .   ஆனால் USB யில் மேலும் சில பயன்பாடுகள் இருப்பதை பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது .  அவற்றில் சிலவற்றை நாம் பார்க்கலாம் ..

USB மைக்ரோ வேவன் : 


இதை பயன்படுத்தி நமது உணவுகளை சூடாக்கி கொள்ள முடியும் .   விலை கிட்டத்தட்ட 160 டாலர் இருக்குமாம் .
USB ஐஸ் பாக்ஸ்:


 குளிர்பானங்களின் குளிர்ந்த நிலையை பாதுகாத்து கொள்ளுங்கள் .   50 டாலர் வரை விலை இருக்கிறது 

 USB Rechargeable பாட்டரி :


USB பயன்படுத்தி நமது பாட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும் .  


USB Watch : 





USB Coffee Mug :

காபி கூட தயாரிக்கலாமாம்



டிஸ்கி :  என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா ....?  வருங்காலத்தில ஒரு கணிபொறி மாத்திரம் இருந்தால் போதும் என்கிற நிலை வரப்போகிறது போல ...




சனி, நவம்பர் 05, 2011

தூக்கம் வரவில்லையா - எளிய மருத்துவம்


நம்மில் அநேகர் சரியான தூக்கம் இல்லாமல் அவதி படுகிறோம் .  அப்படி சரியான தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை உபயோகித்து பார்க்கலாமே 



  1. இரவில் உணவருந்திய பின் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுங்கள் .  நிம்மதியாக தூங்கலாம் .
  2. வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிட தூக்கம் இல்லாமல் துன்பப்படும் நோய் குணமாகும் .   நரம்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.
  3. இரவில் தூக்கம் வரவில்லை என்றால் , கசகசாவை தூள் செய்து வைத்து கொண்டு படுக்க போகும் போது அதை பாலில் கலந்து சாப்பிடுங்கள் .  சுகமான தூக்கம் வரும் .
  4. இரவில் தூங்கும் முன் சூடான பசும்பாலில் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும் .  நியாபக சக்தி பெருகும் .
  5. தூங்கும் போது கண்டபடி தூங்க கூடாது .  பொதுவாக வலக்கை பழக்கமுள்ளவர்கள் இடப்புறமாகவும் ,  இடக்கை பழக்கமுள்ளவர்கள் வலது புறமாகவும் திரும்பி படுக்க வேண்டும். 
  6. எந்த கரங்களுக்கு வேலை மிகுதியோ அந்த கரம் மேலே இருக்கும் படி படுத்து தூங்கினால் தான் சரியான ஒய்வு கிடைக்கும் . 
  7. இரவில் படுக்கும் முன் இரண்டு கால்களையும் நன்றாக அழுத்தி தேய்த்து விடுங்கள் .  நல்ல தூக்கம் வரும் .  புத்துணர்ச்சியும் கிடைக்கும் .
 டிஸ்கி :   யாருக்கும் கெடுதல் நினைக்காமல் ,  யாரையும் கெடுத்து பேசாமல் கடவுளுக்கு பயந்து வாழுங்கள் ..   நல்ல தூக்கம் வரும் .   செய்து தான் பார்ப்போமே ....

24 காரட் தங்க ஆடைகள் - இன்று ஒரு தகவல்


தங்கம்  என்று சொன்னாலே நிறைய பேருக்கு ஒரு கிக் தான் .  அதுவும் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம் .   தங்கம் மீதான மோகம் அமெரிக்க ,  ஐரோப்பிய நாடுகளை விட ஆசிய நாடுகளில் தான் அதிகம் உள்ளது என்கிறது ஒரு ஆய்வு .  இந்த சூழலில் தான் தங்கத்தில் ஆடைகளை (  கழுவக்கூடிய ) உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள் .


சுவிட்சேர்லண்டை சேர்ந்த பொறியாளர்கள் 10  வருடங்கள் உழைத்து இந்த தங்க ஆடையை உருவாக்கியுள்ளனர்.    ஆடையுடன் இப்படி தங்கத்தை இணைக்க முற்ப்பட்ட முயற்சி முதன்முறை அல்ல .   முன்னாள் ஆராய்ச்சியாளர்கள்,  பட்டு நூலுடன் வெள்ளியை  இணைக்க முறப்பட்டு மெல்லிய நூலை சுற்றிலும் வெள்ளியை போர்த்தி முயற்சி செய்தனர் .  இந்த முயற்சி எதிர்பார்த்த பலன் தரவில்லை எனினும் தங்க ஆடை உருவாக்குவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது எனலாம்.

 பிளாஸ்மா கோட்டிங் முறையை பயன்படுத்தி இந்த தங்க ஆடைகள் உற்பத்தி செய்யப்படுமாம் .   இந்த தங்க ஆடைகள் முழுவதும் தண்ணீரால் கழுவப்படும் சக்தி கொண்டதாக இருப்பது அதன் சிறப்பு .

 இதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் ,  தங்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தற்பொழுது 8 கிராம் சுத்த தங்கத்தில்   தங்க கழுத்து பட்டையை         ( Golden Neck Tie ) உருவாக்கி உள்ளார்கள் எனவும் அதின் விலை 7500 ஸ்விஸ் பிரான்க்  ( கிட்டத்தட்ட 8500  டாலர்  , அதாவது சுமார் 425000 ரூபாய் ) மட்டும் தான் .

டிஸ்கி :  இந்த செய்தியை எழுதும் போதே நீங்கள் இப்பொழுது என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்கு தெரிகிறது .

  1. 425000 ரூபாய்க்கு ஒரு டை வாங்குவதை விட 20 பவனுக்கு நகை வாங்கி விடுவோம் ..... உண்மை தானே
  2. நிறைய பேர் தன் கல்யாணத்திற்கு மாமனார் வீட்டில் வரதட்சிணையாக கேட்கலாம் ....  உண்மை தான் .   வரதட்சினை கொடுமையில் கேசு போட்டுட்டாங்கன்னா .... இந்த இடுகையும் நானும் பொறுப்பாக முடியாது .  ஹி  .... ஹி.....
  3. ஏம்பா ....! இது கொஞ்சம் ஓவரா இல்ல .....  நானும் உங்க கட்சி தான் ...

வெள்ளி, நவம்பர் 04, 2011

ஒற்றை சக்கரத்தில் போவோம் பயணம் - இன்று ஒரு தகவல்


பைக் என்று சொன்னாலே குறைந்தது இரண்டு சக்கரம் இருக்கும் என்று நமக்கு தெரியும் .   ஒற்றை சக்கரம் உள்ள பைககுகள் மிக குறைந்த எடையும் , மிக எளிதில் செயல்படும் திறனும் உள்ளதால் , இந்த ஒற்றை சக்கர பைக்கை குறித்த சிறிய தகவலை நாம் பார்க்கலாம் .


RYNO என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஒற்றை சக்கர வாகனம் மின்சக்தியை கொண்டு ஓடக்கூடியது.   அதிகபட்சமாக 40 கிமீ /  மணி வேகத்தில் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது .   இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள லிதியம் அயன் பாஸ்பேட் பாட்டரி 1 மணி 30  நிமிடங்களுக்குள் முழுவதும் சார்ஜ் செய்யக்கூடிய அளவில் உள்ளது .   




57  கிலோ எடையுடைய ஒரு எளிய வாகனம் தான் இது .   நெடுந்தொலைவுக்கு பயன்படாமல் ,  குறுகிய பயணத்திற்கு இந்த வாகனம் சிறந்தது .   அடுத்த ஆண்டில் விற்ப்பனைக்கு வரவுள்ள இந்த வாகனத்தின் விலை 3500 டாலர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

டிஸ்கி :  பிறகு என்ன ..?  டக்குன்னு ஒரு வண்டிக்கு ஆர்டர் கொடுங்க ... பக்கத்திலே இருக்கிற கடைக்கு போய் பந்தாவா எறங்குங்க .....  பாத்துங்க ... வண்டியை கொஞ்சம் கவனமா ஓட்டனும் ...  ஹீரோ ஆக ஆசைப்பட்டு காமடியன் ஆகி விடக்கூடாது ...   ஹி ... ஹி.. 

வியாழன், நவம்பர் 03, 2011

புகை பிடிப்பவரா நீங்கள் .....? இதை கொஞ்சம் பாருங்கள்


புகை பிடிக்கும் பழக்கம் 3000  வருடங்களுக்கு முன்பாகவே இந்த உலகில் தோன்றி உள்ளது என் ஆய்வுகள் தெரிவிக்கின்றன .   இன்றைய உலகில் புகை பிடிப்பது ஒரு ஸ்டைலான காரியமாக மாறி உள்ளது .  டென்ஷன்  ஆனால் தான் புகை பிடிக்கிறோம் என அநேகர் சாக்கு சொல்லுகிற போது   அநேகம் இளைஞர்கள் .., ஏன் மாணவர்கள் கூட புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்  என்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது .  உண்மையில் இந்த புகை பிடிப்பதால் வருகிற காரியங்களை கொஞ்சம் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது .


சிகரட்கள் கிட்டத்தட்ட 4000  வேதிபொருட்களை கொண்டுள்ளது அவற்றில் 100 க்கும் மேற்பட்ட நச்சு பொருட்கள் உள்ளன என்பது கொஞ்சம் அதிர்ச்சி கலந்த உண்மை .  தகவலுக்கு :  http://quitsmoking.about.com/od/chemicalsinsmoke/a/chemicalshub.htm .   சிகரெட்டில் கலந்துள்ள பொருட்களை அறிந்து கொள்ள கொஞ்சம்  http://quitsmoking.about.com/cs/nicotineinhaler/a/cigingredients.htm பாருங்கள் .
  
  1. சிகரெட்டில் உள்ள நிகோட்டின் புகையை உள் இழுக்க ஆரம்பித்த 10 வினாடிகளுக்குள் மூளையை சென்று அடைந்து விடும் .  இது உடலின் எல்லா பகுதிகளிலும் கலந்து இருக்கும் .   புகை பிடிக்கும் பெண்களின் தாய்ப்பாலில் கூட இந்த நச்சு இருக்குமாம் .
  2. சிகரெட்டில் உள்ள கார்பன் monaxide  ரத்த சிவப்பணுக்களின் ஹீமோ க்ளோபினை பாதித்து உடலுக்கு தேவையான ஆக்சிஜென் கிடைக்காமல் செய்து விடும் .
  3. சிகரெட்டில் உள்ள கான்சர் உருவாக்கும் நச்சு பொருட்கள் ,  செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முக்கியமான ஜீன்களை பாதித்து  அவற்றின் மூலம் ஒழுங்கற்ற செல் வளர்ச்சி உண்டாகி கான்சர் உருவாகிறது .
  4. புகை பிடிப்பதினால் சுவாச மண்டலம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது .
  5. சேதமடைந்த செல்களை சரி செய்யும் antioxidants அளவு ரத்தத்தில் புகை பிடிப்பதின் மூலம் குறைகிறது .
  6. புகை பிடிப்பவர் தனக்கு மட்டும் அல்லாமல் தன அருகில் நிற்ப்பவருக்கும் இதே பாதிப்பை ஏற்ப்படுதுகிறார் .


இத்தனை பாதிப்புகளை ஏற்ப்படுத்தும் இந்த புகை பழக்கத்திற்கு எதிராக கடுமையான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த சமுதாயம் உள்ளது .   என்ன தான் சொன்னாலும் சம்பந்தப்பட்ட நீங்கள் முடிவு எடுத்தால் தான் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடிகோல முடியும் .


டிஸ்கி :  இந்த கட்டுரையை எழுதும் போது எனக்கு  இரண்டு காரியங்கள் நியாபகத்திற்கு வருகிறது .

  1. கடவுள் மனிதன் புகை பிடிக்க வேண்டும் என நினைத்திருந்தால் அவனது மூக்கு தலைக்கு மேலே புகை போக்கி போல வைத்திருக்கலாம் .
  2. ஒரு சிகரெட்டின் அளவு குறைய குறைய அதை புகைப்பவரின் ஆயுளும் குறைந்து கொண்டிருக்கிறது .

ஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இன்று ஒரு தகவல்


நம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அஜீரண கோளாறுகளால் கஷ்டப்படுவதை அறிந்திருக்கிறோம் .  இதற்காகவே பல மருந்துகளை மருந்து கம்பனிகள் தயாரித்தும் வருகின்றன .  ஆனால் இந்த மாதிரியான அஜீரண கோளாறுகள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை பயன்படுத்தினால்  நீங்கி நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம் .



விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணம் ,  பசியின்மை ,  வயிறு உப்பி காணப்படுதல் ,  உடல் வலி , அசதி  முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் சிறந்தது .    2  பெரிய சுக்கு ,  2  ஏலக்காய் இவற்றை நசுக்கி கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து , 2  டம்ளர் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து ,  முக்கால் தம்ளராக சுண்டியவுடன் கருப்பட்டி ( பனை வெல்லம் ) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலந்து குடித்து வந்தால் அணைத்து அஜீரண கோளாறுகளும் நீங்கி உடம்பு கலகலப்பாக இருக்கும் .  


ஓமம்  -  200 கிராம்  ,  சீரகம்  -  100  கிராம் ,  மிளகு  -  100  கிராம் ,  கருஞ்சீரகம் -  100  கிராம் ,  பூண்டு  - 50  கிராம் ,  கறிவேப்பிலை - 100  கிராம் ,  தோல் நீக்கிய சுக்கு -  200  கிராம் ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில் வரித்து பொடி செய்து  தினசரி பகல் உணவில் 2  ஸ்பூன் 1  பிடி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர செரிமானம் நல்ல நிலையில் ஆகி வயிற்று கோளாறு இன்றி சுகமாக இருக்கலாம் .  


தினசரி 4  பேரீச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கடுப்பு ,  அஜீரண பேதி , மலசிக்கல்  போன்ற வயிற்று கோளாறுகள் வருவதில்லை .  


சுக்கு பொடியுடன் சுடு நீரை சேர்த்து குடித்தாலும் அஜீரணத்தில் இருந்து நல்ல சுகம் கிடைக்கும் .


நன்றி : குலசை சுல்தான்

புதன், நவம்பர் 02, 2011

சைக்கிள் ஓட்டுங்க - சார்ஜ் பண்ணுங்க - இன்று ஒரு தகவல்


சைக்கிள் என்ற வாகனத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது .  சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று வரை விரும்பி ஓட்டும் ஒரு வாகனம் என்றால் அது சைக்கிள் தான் .  சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத இந்த வாகனங்களின் எண்ணிகை தற்பொழுது குறைந்து வந்தாலும் ,  சைக்கிள் ஓட்டுவதின் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று மார் தட்டுகின்றனர் ஜெர்மனியை சேர்ந்த சில்வர் பக் கம்பெனி . 


Starke 1 மற்றும் Stark 2 என்ற 2  மாடல்களில் இந்த நிறுவனம் சைக்கிள்களை தயாரித்துள்ளது.   இந்த சைக்கிள் உடன் ஒவ்வொரு USB Port இணைக்கப்பட்டுள்ளது .   இந்த சைக்கிள் ஓட்டப்படும் பொழுது Dynamo வில் உருவாகும் மின்சாரம் இந்த போர்ட் வழியாக மொபைல் போன் மற்றும் MP3 பிளேயர் போன்றவற்றை சார்ஜ் செய்ய பயன்படுத்தலாம் .   அட ...!

Stark 1 மாடல் 12 . 5  கிலோ எடையும்  , Stark 2 மாடல் 11 . 9  கிலோ எடையும் உள்ளதாக கிடைக்கிறதாம் .    இந்த Stark 1 மாடல் சைக்கிள் 1 . 5 மணி நேரம்  ( 32 கிலோ மீட்டர் ) இயங்கத்தக்க ஒரு மின் மோட்டார் ஒன்றும் உள்ளதாம் . 

 
டிஸ்கி :  எப்படியோ ... எல்லா வழிகளிலும் மின்சாரம் தயாரிக்க கண்டுபிடித்து கொண்டு இருக்கிறார்கள் .   புதிய அறிமுகங்களை நாம் எதிர்பார்த்து காத்திருப்போம் .

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

உலகின் அதிவேக மோட்டார் பைக்ஸ் - இன்று ஒரு தகவல்


என்னதான் பல வகையான கார்கள் வந்திருந்தாலும் ,  மோட்டார் பைகில ஏறி அதிவேகத்தில பறந்து போகிற சுகமே தனிதான் என்பது அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும் .  அப்படி மோட்டார் பைக் வைத்திருக்கிற அநேகர் கார் வாங்காமல் இன்னும் பைக்கில் பறந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .  அவர்களுக்காக ,  உலகின் அதிவேக மோட்டார் பைக் குறித்த ஒரு தொகுப்பை காணலாம் .



ஐந்தாவது இடம் :   Kawasaki Ninja ZX-14 

 DOHC என்ஜின் தொழில் நுட்பத்தை கொண்டுள்ள இந்த பைக் 1352 CC  என்ஜினை கொண்டுள்ளது.   190 bhp  சக்தியை இந்த இஞ்சின் வெளியிடுகிறது.  அதிகபட்சமாக 190 மைல் / மணி வேகத்தில் இந்த பைக்கில் செல்லமுடியும் .   இதனுடைய விலை 9 ,50 ,000 ரூபாய் மட்டும் தான். 


 நான்காவது இடம் :   Suzuki Hayabusa 


197 bhp  சக்தியை வெளியிடும் 1349 CC இன்ஜினை இந்த பைக் கொண்டுள்ளது.    அதிகபட்சமாக 200 மைல் /  மணி வேகத்தில் இந்த பைக்கில் பறக்கலாம் .   இந்த பைக்கின் விலை 14 ,30 ,000 ரூபாய் மட்டும் தான் . 


மூன்றாவது இடம் :   MTT Turbine Superbike (Y2K Superbike)  

320 bhp  சக்தி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் டர்பைன் இன்ஜினை இந்த பைக் கொண்டுள்ளது .   அதிகபட்சமாக 230 மைல் /  மணி வேகத்தில் இந்த பைக்கில் பறக்கலாம.   இந்த பைக்கின் விலை 1 ,75 ,000 டாலர் மட்டும் தான் ( அதாவது கிட்டத்தட்ட 87 லட்சம் ருபாய் மட்டும் தான் )


இரண்டாவது இடம்  : MTT Streefighter 


டர்பைன் இஞ்சின் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் இந்த பைக்கின் சக்தி 420 bhp .  அதிகபட்சமாக 250 மைல் / மணி வேகத்தில் இந்த பைக் பறக்குமாம் .   இதனுடைய விலை 1 ,50 ,000 டாலர் மட்டும் தான் ( அதாவது கிட்டத்தட்ட 75   லட்சம் ருபாய் மட்டும் தான்)


முதல் இடம் :  Dodge Tomahawk  


500 bhp சக்தி கொண்ட வைப்பர் V10 இன்ஜினை கொண்டு இந்த பைக் இயங்குகிறது .   அதிகபட்சமாக 300 மைல் /  மணி வேகத்தில் பறக்கலாம் .   இதனுடைய விலை  5 ,55 ,000 டாலர் மட்டும் தான் ( அதாவது கிட்டத்தட்ட 2 கோடியே 75  லட்சம் ருபாய் மட்டும் தான் ) 


டிஸ்கி :  என்ன நண்பர்களே ..., இதில எந்த பைக்கை வாங்கலாம் என்று பிளான் பண்ணுறீங்க போல .    நாங்கலாம் இந்த ரூபாயில என்னவெல்லாமோ செய்துவிடுவோம் அப்படின்னு சொல்லுற கூட்டத்தில தான் நான் இருக்கேன் . 

சனி, அக்டோபர் 29, 2011

மழைகாலத்தில் ஒரு பாட்டி - ஒரு உண்மை சம்பவம்


காலை நேரம் .. வேகமாக பக்கத்துக்கு ஊருக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தேன் .  நல்ல மழைக்கு உபயோகபடுத்தும் கோட்டும் சூட்டும் போட்டுகொண்டு என் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டேன்.   மழைகாலமாய் இருந்தபடியால் ரோட்டில் வாகனங்கள் அதிகமில்லை .  இருப்பினும் சறுக்கி விடும் என்ற காரணத்தால் நானுன் வேகமாக செல்லவில்லை.

ஒரு நேரான ரோட்டில் செல்லும்போது , கொஞ்சம் வேகத்தை கூட்டினேன் .   ஹெல்மெட் அணிந்திருந்தாலும் போகும் வரும் ஜனங்களை பார்த்துகொண்டு பைக்கில் சென்றுகொண்டு இருந்தேன் .   தொலை தூரத்தில் ,  நடுரோட்டில் தலையில் சிறு சுமையுடன் யாரோ நடப்பது தெரிந்தது.   அருகில் ஊர் ஒன்றும் இல்லாதபோது ,  இந்த ரோட்டில் ,  இந்த மலையில் நடப்பது யார் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே எனது வாகனம் அவர்களை சமீபித்தது.
அருகில் சென்று உற்று நோக்கியபோது தான் கவனித்தேன் .  அது ஒரு பாட்டி என்று .   ஐயோ பாவம் ,  இவர்களை நாம் ஏன் வீட்டில் விடகூடாது என நான் நினைத்தபோது எனது வாகனம் கொஞ்சம் முன்னால் சென்றுவிட்டதை உணர்ந்தேன் .  எனது பைக்கை திருப்பிக்கொண்டு அவர்கள் அருகில் நிறுத்தினேன்.

பாட்டி என்று கூப்பிட்டேன் .   என்னை நிமிர்ந்து பார்த்தார்கள் .  ஒரு 70  வயது இருக்கும் .  நரைத்து போன முடிகள் மழைநீரில் ஒட்டிக்கிடந்தன.   கன்னங்கள் குழிவிழுந்து ,  சுருக்கத்தினால் முகம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்க ,  கைகள் மட்டும் நடுங்கி கொண்டேயிருந்தது.   மேலே என்ன சுமை என்று பார்த்தபோது கொஞ்சம் விளக்குமாறு ( Broom to Sweep )  கட்டு அவர்கள் தலையில் இருந்தது.    பாட்டி என் பைக்கில் ஏறுங்கள்.  உங்கள் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்று நான் கேட்டபோது என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்கள் ...  

அப்பா ...!  ஒரு விளக்குமாறு வாங்கிறாயா ...?   நான் சொன்னேன் "  பாட்டி  விளக்குமாறு வேண்டாம் ,  இந்த மழையில் நீங்கள் நடக்கவேண்டாம் , என் பைக்கில் ஏறுங்கள் ,  உங்கள் வீட்டில் விட்டுவிடுகிறேன் ".   பட்டி சொன்னார்கள் ,  "  அப்பா ... ஒரு விளக்குமாறு வாங்கிக்கொள் ..  தினமும் ஒரு விளகுமாறாவது விற்றால்தான் என்னால் சாப்பிடமுடியும் .  எங்க வீட்டுக்காரர் செத்துபோய் பல வருஷம் ஆச்சு ... பிள்ளை குட்டிங்க ஒன்னும் இல்லை .  இந்தா ...பக்கத்துக்கு ஊருக்கு போய் விளக்குமாறு விக்கத்தான் போனேன் .  ஆனா மழை பார்த்தியா ... ஒன்னு கூட விக்கலே ...  நான் கஞ்சி குடிச்சு ரெண்டு நாளாச்சு ... ஒரு விளக்குமாறு வாங்கிறியா...?
கொஞ்சம் அதிர்ந்தும் அதிகம் உடைந்தும் போனேன் .   பாட்டி வைத்திருந்த விளக்குமாறு வாங்கி எங்க வீட்டில் பயன்படுத்த முடியாததால் ,  பர்சை திறந்து கொஞ்சம் பணத்தை கொடுத்தேன் .   கொட்டும் மழையிலும் ,  வருத்திய பசியிலும்  பணம் வாங்க மறுத்த அவர்களை கொஞ்சம் கட்டாயப்படுத்தி அந்த பணத்தை அவர்கள் கையில் திணித்தேன் ...   

பணத்தை வாங்கி கொண்டு என்னை பார்த்து சொன்னார்கள் , " அப்பா ... உன் பிள்ளைங்க குட்டிங்க எல்லாம் ரொம்ப நாள் நல்லா இருக்கும் " .   மழைத் தண்ணீரோடு என் கண்ணில் நீர் வழிந்தததை அவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை .   ஆனால் கடைசி வரை என் பைக்கில் ஏறவே இல்லை .  மழையோடும் சுமையோடும் நடந்து சென்ற அந்த பாட்டியை வெகுநேரம் மழையில் நனைந்தபடி பார்த்துக்கொண்டே இருந்தேன் .

 
வீட்டிற்கு வந்து தலையை துவட்டி விட்டு படுக்கையில் படுத்தபோதும்  இன்னும் அந்த பஞ்சுதலையும் , வெகுளி பேச்சும் , ஏங்கிய கண்களும் என் கண்களுக்கு முன்பாக இருந்துகொண்டேயிருக்கிறது.   அந்த பாட்டி எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் நான் கேட்க மறந்து விட்டேன் .   கடவுளே ....! எப்படியாவது அந்த பாட்டியை கடைசிவரையும் காப்பாற்றும் என வேண்டிக்கொள்ள தான் என்னால் முடிந்தது.


உலகின் மிக நீண்ட நீச்சல் குளம் - இன்று ஒரு தகவல்


நீச்சல் குளங்களை குறித்து அறியாத யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது.   நகரங்களில் இந்த நீச்சல் குளங்கள் செயற்கையாக கட்டப்பட்டும்  . கிராமங்களில் இந்த நீச்சல் குளங்கள் இயற்கையாக ( அதாங்க நம்ம ஊரு குளம் .. ஹி ஹி ) அமைந்தும் உள்ளது.  இந்த நிலையில்  இந்த உலகின் மிக நீண்ட நீச்சல் குளத்தை ஜெர்மனியில் கட்டுவதற்கு Realitties : United என்ற நிறுவனம் வடிவமைப்பை தயார் செய்துள்ளது.  
 
 
 
ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் ஓடும் Spree என்ற நதியில் தான் இந்த பெரிய நீச்சல் குளம் கட்டப்பட போகிறது .  இந்த நீச்சல் குளத்தின் நீளம் 745 மீட்டர் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  17  ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் மொத்த நீளத்தை விட இது அதிகமாகும். 
 
3.9  ஹெக்டேர் நிலப்பரப்பில் அமையும் இந்த பெரிய நீச்சல் குளத்தின் தண்ணீரானது நீச்சல் குளத்தின் ஆரம்பத்தில் 1 . 8  ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் நாணல் படுகையினால் வடிகட்டப்பட்டு நீச்சல் குளத்தினுள் அனுமதிக்கப்படும்.   நீச்சல் குளத்தின் பின் பகுதியில் குறுக்காக ஒரு அணை கட்டப்பட்டு சுத்திகரிக்கப்படாத நீர் பின்னால் நீச்சல் குளத்திற்குள் வராமல் தடுக்கப்படும்.
 
 
 
ஆற்றங்கரையின் பல பகுதிகளில் இதற்காக படிகள் அமைக்கப்பட்டு , தோட்டங்கள் , பூங்காக்கள் , உடை மாற்றும் அறைகள் அமைக்கப்படுவதினால் ஜெர்மன் மக்கள் அநேகர் இந்த நீச்சல் குளத்திற்கு படையெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த திட்டம் மிலன் நகரில் நடந்த மூன்றாவது  உலகளாவிய  ஹல்சியம் அவார்ட்ஸ் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல் . 
 
டிஸ்கி :  அட நல்லா இருக்கே ... அப்படியே எங்க ஊரு கூவம் ஆற்றையும் இப்படி மாற்ற முடியுமான்னு கொஞ்சம் யோசிக்க தோன்றுகிறது.   நண்பர்களே உங்களால முடிந்தால் நீங்கள் கூட செய்யலாமே ..!.
 
 

வெள்ளி, அக்டோபர் 28, 2011

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்


விமானங்கள் இல்லாத ஒரு காலத்தை நம்மால் யோசித்து கூட பார்க்கமுடியாத சூழலில் நாம் இருக்கிறோம் .    சென்னையில் Breakfast ,  டெல்லியில் Lunch  , கல்கத்தாவில் Dinner , இதெல்லாம் சாத்தியமா என்றால் ,  விமானத்தின் மூலம் சாத்தியம் என்று தான் சொல்ல தோன்றுகிறது.   உலகம் முழுவதும் இதற்காக பல விமானதளங்களும் ( Airport ) ,  லட்சகணக்கான விமானங்களும் இயங்கி வருகின்றன.   இந்த சூழலில் , இன்னும் பெருகி வரும் விமான தேவையை சந்திப்பதற்கு என்ன செய்யலாம் என்று நினைத்ததின் விளைவு தான் இந்த பறக்கும் விமானதளம் . 



Airborne Metro என்று அழைக்கப்படும் இந்த விமானதளம்  ஒரு பெரிய பறக்கும் விமானம் தான் .   ஆமா ... இந்த விமானம் பறந்து கொண்டு  இருக்கும் போது , பிற குட்டி விமானங்கள் இந்த விமானத்தில் வந்து இறங்கி பின் பிரயாணிகளை என்று கொண்டு பறந்து போகும் .  உதாரனத்திற்க்கு  , நாம் இப்பொழுது அமெரிக்கா போகவேண்டுமெனில் சிலவேளை Honkong போய் வேறு விமானத்தில் ஏறவேண்டும் .   ஆனால் அப்படி இன்னும் ஒரு விமானதளத்தில் நாம் இறங்குவதற்கு பதில் நமது விமானம் இந்த பறக்கும் விமானதளத்தில் இறங்கும் .  அதில் கொஞ்ச நேரம் பயணம் செய்தபிறகு அங்கிருந்து வேறு விமானம் நம்மை நாம் விரும்பும் இடத்திற்கு கொண்டு போகும் . 

Airborne Metro என்று அழைக்கப்படும்  இந்த பறக்கும் விமானதளத்தில் கிட்டத்தட்ட 3000  பேர் பயணிக்கும்  / தங்கியிருக்கும் வசதியும் குட்டி விமானங்கள் இறங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கும் .

இவ்வளவு  பெரிய விமானம் தரை இறங்கி பின் ஆகாயத்தில் பறக்க வேண்டுமானால் சந்தேகமில்லாமல் அதற்க்கு ஆகும் எரிபொருள் தேவை மிக அதிகம் .   அதனால் இந்த விமானத்தின் எரிபொருள் தேவையை அணுசக்தியின்  மூலம் சந்திக்கவும்  ,  தொடர்ந்து வானத்தில் பறந்து கொண்டேயிருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.   இதன் மூலம் 600 மைல் பிரயாணம் செய்தால் 40  சதவீதம் எரிபொருளும்  , 6000  மைல் பயணம் செய்தால் 80 சதவீதம் எரிபொருளும் சேமிக்கப்படும் என்கின்றனர் இதை வடிவமைத்த பொறியியல் வல்லுனர்கள் ....

டிஸ்கி  :  அட என்னவெல்லாம் யோசிக்கிறாங்க ..... நல்லாத்தான் இருக்கு  .... வருங்காலங்களில் நெருக்கடியை சமாளிக்க இந்த மாதிரி திட்டங்கள் தேவை தான்


நன்றி : தி ஏவியேசன் வீக்


வியாழன், அக்டோபர் 27, 2011

சக்கரங்களின் மேல் ஒரு அரண்மனை - ஒரு சுற்றுலா தகவல்


Palace On Wheels என அழைக்கப்படும் சொகுசு சுற்றுலா தொடர்வண்டியை  ( Luxury Tourism Train )  குறித்து இந்த கட்டுரையில் நாம் காண்போம் .   இந்த தொடர்வண்டி இந்திய ரயில்வே துறையால் ராஜஸ்தான் மாநிலத்தின் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும்பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சொகுசு தொடர்வண்டியாகும் .   1982 ம் வருடம் ஜனவரி மாதம் 26 ம் தேதி இந்த சொகுசு தொடர்வண்டியின் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 


 1990 ம் ஆண்டு முழுவதும் குளிர்சாதன வசதியுடன் மாற்றப்பட்ட இந்த சொகுசு தொடர்வண்டி 13 பெட்டிகள்,  2 உணவகங்கள் , 1  பார் மற்றும் 4  சேவை பெட்டிகளுடன் மீட்டர் காஜ் தண்டவாளத்தில் வளம் வந்தது.  பின்னர்  1995 ம் வருடம் முழுவதும் மாற்றப்பட்ட 14 பெட்டிகள்  , 2 உணவகங்கள் , 1 பார் மற்றும் 4 சேவை பெட்டிகளுடன்  அகல இருப்புப்பாதையில் தன் பயணத்தை தொடர்கிறது.  



ஒவ்வொரு பெட்டிகளும் 4  தூங்கும் அறைகள் உள்ளதை உள்ளது .  தூங்கும் அறைகள் நன்கு அலங்கரிக்கப்பட்ட பர்னிச்சர்கள் ,  ஓவியங்கள் , மற்றும் கைவேலை பொருட்களை கொண்டுள்ளது .  ஒவ்வொரு அறைக்கும் கழிப்பிட வசதி இணைக்கப்பட்டுள்ளது.   இந்த 14  பெட்டிகளும்  ராஜஸ்தான் மாநிலத்தின் 14 முக்கிய இடங்களின் பெயர்களால் ( Alwar, Bharatpur, Bikaner, Bundi, Dholpur, Dungarpur, Jaipur, Jaisalmer, Jhalawar, Jodhpur, Kishangarh, Kota, Sirohi, and Udaipur. ) அழைக்கப்படுகிறது .   


மிக அழகான ,  சுத்தமான ,  சுவை தரும் உணவுகள் கிடைக்கும் 2 உணவகங்கள் ( பெயர்கள் :  மகாராஜா மற்றும் மகாராணி )   இந்த சொகுசு தொடர்வண்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது.    டெல்லியில் இருந்து புறப்படும் இந்த தொடர்வண்டி  ஜெய்ப்பூர்  , ஜெய்சல்மர் ,  ஜோட்ப்பூர் ,   சவாய் மதிபூர் ,  உதய்ப்பூர் , பரத்ப்பூர் , மற்றும் ஆக்ரா வரை சுற்றியோடுகிறது ...


இந்த தொடர்வண்டியில் பயணிக்கும் அனுபவமும்  , அது சுற்றியோடுகிற இடங்களில் கிடைக்கும் பயண அனுபவங்களும் வாழ்வில் மறக்கமுடியாதவை என்றால் அது மிகையாகாது .  



கருவில் கலையும் கனவுகள்

இப்போதெல்லாம் கண்ணை மூடினாலே ...

கனவுகள் தான்....

நினைவுகள் எல்லாம் ...

நிஜமாக போகிற உற்சாகம் ......



                இன்னும் மாதம் எட்டு தான்...

                சூழ்ந்துள்ள இருட்டில் இருந்து

               விடுதலை....

               புது வாழ்வின் புத்தொளி நோக்கி

               பூத்திருக்கும் கண்கள்....



அன்னையின் முகம் ....

ஹா... நினைத்தாலே சுகமல்லோ.....!

தந்தையின் பரிவு.....

ஏதுண்டு இதற்கிணை....!


              கற்பனை குதிரை

              தறிகெட்டு ஓட....

             வானோர் எல்லாம்

             வாழ்த்துவது போலவும் ............

             பூலோகத்தார் எல்லாம்

            புகழுவது போலவும் .........

            சிறந்த பெண்ணை பெற்றதால்

            பூரிக்கும் பெற்றோரை ...

           பூக்களின் மத்தியில்

           கண்டது போலவும்...


எதையோ சாதித்த


மகிழ்வு......


          ஆ... என்ன இது.....?


          கூர்மையான பற்கள் ....

          அம்மா ...

         என்னை காப்பாற்று ...

         என்னை குத்துகின்றன .....

        ஆ ... என் கை....

         அம்மா......! ஆ.. ஆ....


வெளி உலகை பாராமல்


கருவில் கலைந்தது ...

என் கனவு மட்டுமல்ல ...

என் வாழ்வும் தான்.....



(கருவில் அழிக்கப்பட்ட ஒரு சிறுமி )


நண்பர்களே .....




சிசு கொலைக்கு எதிராக நீங்களும் உங்கள் கருத்துகளை பகிரலாமே.....!

புதன், அக்டோபர் 26, 2011

அமெரிக்கா ரஷ்யா இடையில் சுரங்க ரயில் பாதை - இன்று ஒரு தகவல்


அமெரிக்கா , ரஷ்யா  இரண்டு நாடுகளும் மிக மிக முக்கியமான நாடுகளாய் உலக அரசியலில் திகழ்ந்தவை மற்றும் திகழ்ந்து கொண்டு இருப்பவை .    இந்த நிலையில் ரஷ்யாவின் சைபீரியா பகுதியையும் அமெரிக்காவின் வடக்கு பகுதியான அலாஸ்காவையும் ரயில் பாதைகளில் இணைக்கும் மாபெரும் திட்டத்தை ரஷ்யா அரசு அறிவித்துள்ளது.  


இந்த இரண்டு கண்டங்களையும் இணைக்கும் மகத்தான திட்டம் 65 மைல் கொண்ட பெரிய சுரங்க பாதையை Bering Straight என்ற பகுதியில் கொண்டுள்ளது.  இந்த சுரங்கபாதை  England மற்றும் France யை இணைக்கும் Chunnel சுரங்கத்தை விட இரு மடங்கு நீளமுடையது.    மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தில் சுரங்க பாதைக்கு மாத்திரம் 10 - 12 பில்லியன் டாலர் ஆகும் எனவும் மொத்த ரயில்வே பாதையும் ஏற்ப்படுத்த 65 மில்லியன் டாலர் ஆகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.  

இந்த மாபெரும் பாதையில் அலையில் இருந்தும் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு தேவையான் ஆலைகள் நிறுவப்படும் எனவும் அதன் மூலம் 10 ஜிகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படும் எனவும் தெரிகிறது.  


வருடத்திற்கு 100 மில்லியன் டன் சரக்குகள் இந்த பாதையின் மூலம் அனுப்பப்படும் எனவும் பல லட்சம் பேர் இதி பிரயாணம் செய்வார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.   ஆசியாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் இந்த ரயில் பாதை கட்டிமுடிக்க 15 வருடங்கள் ஆகுமாம்.

நன்றி :  Times on Line



செவ்வாய், அக்டோபர் 25, 2011

உலகின் அதிவேக விமானங்கள் - ஒரு அதிவேக பார்வை


விமானங்கள் என்றாலே அதிவேகமாக பறக்கும் சக்தி கொண்டவை என்பது நம் எல்லாருக்கும் நன்கு தெரியும் .    உலகின் அதிவேகமான விமானங்களை குறித்த தகவலை நாம் காண்போமே ...! 
5 வது இடம்   :   MIG 25 -  FOX BAT  




ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் அதிகபட்ச உயரமாக 80000 அடி வரை பறக்கும் சக்தி படைத்தது.   இதனுடைய அதிகபட்ச வேகம்  3.2  மாக் .   இரண்டு Tumansky R-15B-300 இஞ்சின்கள் இந்த விமானத்தின் சக்திக்கு காரணம் .  


4 வது இடம்   :   SR-71 BlackBird


 U  -  2  என்ற விமானத்தின் மேம்பட்ட விமானமாக இந்த விமானம் 1960 ல் அமெரிக்காவில் வடிவைக்கப்பட்டது.    இது அதிகபட்சம் 100000 அடி உயரம் வரை பறக்கும் சக்தி படைத்தது.   இதனுடைய அதிகபட்ச வேகம்   சுமார் 3.5  மாக் .    40  வருடங்களாக அமெரிக்க விமான படையில் பணியாற்றிய இந்த ரக விமானங்கள் 1998 ல் ஒய்வு பெற்றது .

3 வது இடம்  :  X-15   :


உலகின் மூன்றாவது அதிவேக விமானம் இது .  இது அதிகபட்சம் சுமார் 354330 அடி வரை பார்க்கும் சக்தி கொண்டது.   இதனுடைய அதிகபட்ச வேகம் சுமார்  6. 72 மாக்.     நீர்ம ஆக்சிசனை எரிபொருளாக பயன்படுத்தும் இரண்டு Thiokol XLR99-RM-2 இஞ்சின்கள் இதற்க்கு சக்தி கொடுக்கின்றன .  இந்த விமானம் ஓன்று தயாரிக்க சுமார் 300 மில்லியன் டாலர் செலவாகுமாம்.   இதுவும் அமெரிக்காவின் படைப்புதான் 


2 வது இடம்  :   X-43A   

அமெரிக்காவின்  நாசா விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது இந்த விமானம் .   ஹைபர்சானிக் வகையை சேர்ந்த இந்த விமானத்தின் அதிகபட்ச வேகம் சுமார் 9.8  மாக் .    நீர்ம ஹைட்ரசனை எரிபொருளாக கொண்டு இயங்கும் இன்ஜின்களை கொண்டுள்ளது.   
முதல் இடம் -   விண்வெளி ஓடங்கள்  :  





விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஆற்றல் கொண்ட இந்த விமானங்கள் சக்தி வாய்ந்த இஞ்சின்கள் மற்றும் ராக்கெட் பூஷ்டர்களை கொண்டு இயக்கப்படுகிறது.   இதனுடைய அதிகபட்ச வேகம் 20 மாக் 

டிஸ்கி :  இப்பொழுது நிறைய பேருக்கு மாக் என்றால் என்ன என்று தோன்றுகிறது .  மாக்  =   பறக்கும் பொருளின் வேகம்  / காற்றில் ஒலியின் வேகம் .    இந்த விமானங்களை விட வேகமாக பறக்கும் ஒரு காரியம் இருக்கிறது.   அதனுடைய வேகம் 100  மாக் என வைத்துக்கொள்ளுங்கள்.   அப்படியா ..?    அட ஆமாங்க ... அதான் நம்ம கற்பனை .....   கற்பனை குதிரையை தட்டிவிடுங்க..... ஒரு செகண்ட்ல இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு போகலாம் .   ஹ ...ஹா. ..