சனி, நவம்பர் 12, 2011

இன்னும் என்ன செய்ய போகிறோம் இவர்களுக்கு ...?


கல்வியின் ஆர்வம் / தாக்கம்  மாணவர்களிடம் பெருகியிருக்கிறதோ இல்லையோ ... பெற்றோர்களிடம் நிறைய பெருகியிருக்கிறது .  ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும் முன்பு பெற்றோர் படுகிற வேதனை மிக கடுமையானது என்றால் அது மிகையல்ல .   எப்படியாவது தான் சாதிக்க முடியாததை தன் பிள்ளைகள் சாதித்து விட வேண்டும் என்று அவர்கள் எடுக்கிற பிரயாசங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல .  ஆனால் நன்மைக்காக எடுக்கப்படுகிற அந்த பிரயாசங்கள் எங்கோ ஒரு மூலையில் சின்ன உள்ளங்களை வேதனை படுத்துகிறது என்பது பல மடங்கு உண்மை .



 அதிகாலையிலே பிள்ளைகள் தட்டி எழுப்பப்பட்டு படிக்க வைக்கப்படுகிறார்கள் .  சரியான தூக்கம் இல்லாமல் தவிக்கும் பிள்ளைகள் தூங்கவும் முடியாமல் படிக்கவும் முடியாமல் திணறுவதை கவனிக்க பெற்றோருக்கு முடிவதில்லை .  கொஞ்சம் பெரிய பிள்ளைகள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் டியூஷன் அனுப்பப்படுகிறார்கள் .

அதிகாலை படிப்பை முடித்து தன்னுடைய எடையை போல எடையை கூலிகள் போல பிள்ளைகள் தூக்கி கொண்டு போவதை பெற்றோர்கள் பெருமையாக பார்த்து கொண்டிருக்க பிள்ளைகளின் முதுகு சுமையினால் நிறைந்து வேதனை தருகிறதையும் யாரும் கவனிப்பதில்லை .

 சாயங்காலம் வரை பள்ளியில் பாடம் படித்து வீட்டிற்கு களைத்து வரும் பிள்ளைகள் பேசக்கூட நேரம் இல்லாமல் ஒரு காபி குடித்துவிட்டு டியூஷன் அனுப்ப இல்லை துரத்தப்படுகிறார்கள் .  

 இரவு எட்டு மணிக்கு திரும்பும் பிள்ளைகள் உணவிற்கு பின்பும் படிக்கும் படி அறிவுறுத்த / வற்புறுத்த படுகிறார்கள் .  கொடுமை தாங்காமல் புத்தகத்தை எடுக்கும் பிள்ளைகள் அப்படியே தூங்குவதும் நாம் பல இடங்களில் காணலாம.


மீண்டும் காலை 5  மணி ..   எல்லாம் சரி தான் . விடுமுறை நாட்களிலாவது கொஞ்சம் ஓய்வு என்றால் அன்றும் சிறப்பு வகுப்புகள் மற்றும் கணிப்பொறி பயிற்சி மற்றும் பிற ...
இவை எல்லாம் செய்து முடிக்க பெற்றோர் எடுக்கும் முயற்சிகளும் அவர்கள் செலவழிக்கும் பணமும் எப்படியாவது தன் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று தான் எண்ணப்படுகின்றன .  ஆனால் சில எதிர்மறையான விளைவுகள் நம் பிள்ளைகள் வாழ்வில் ஏற்ப்படும் என்பதை நாம் மறந்து போக கூடாது .


பெற்றோர் பிள்ளைகளுடன் அமர்ந்து பேசி சிரித்து விளையாடும் நாட்கள் போய் பாடத்தில் இருந்து கேள்வி கேட்கும் நாட்கள் பெருகி உள்ளதால் , பெற்றோரை விட்டு மனதளவில் பிள்ளைகள் பிரிய நேரிடும் .

எப்பொழுதும் படிப்பு படிப்பு என்று இருப்பதால் உடல் நிலையும் ,  மன நிலையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது 


பெற்றோருடன் அதிக நேரம் செலவழிக்க முடியாததால் தான் பிள்ளைகள் வளரும் போது அன்பு , குடும்பம் , விட்டு கொடுத்தல் என்பவைகள் குறித்த அறிவு இல்லாமல் அதிக அளவில் அவர்கள் திருமண வாழ்வில் கூட பிரிவுகள் நேர்கிறது .

எல்லாமே .. என் பிள்ளைக்காக தானே என்று நீங்கள் சொன்னாலும்  , உங்கள் பிள்ளை படிப்பில் முதல் இடம் பிடிப்பதை விட வாழ்வில் முதல் இடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள் .  இன்னும் என்ன செய்ய போகிறோம் இந்த சின்ன இதயங்களுக்கு ...?
 

டிஸ்கி :  படிப்பிற்கு முக்கியம் கொடுங்கள் .  தப்பில்லை ஆனால் அதைவிட உங்கள் பிள்ளைகளின் உணர்வுக்கு முக்கியம் கொடுங்கள் .  ஏன் எனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ...
 

வியாழன், நவம்பர் 10, 2011

அதி நவீன காற்றாலை - இன்று ஒரு தகவல்


காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழி மிகவும் சுற்று சூழலுக்கு உகந்தது என்றாலும் அதிகப்படியான காற்றோ ( சூறாவளி / புயல் )  அல்லது குறைந்த காற்றோ இருக்கும் போது அவைகளின் இயக்கம் நிறுத்தப்படுகிறது .  இந்த சூழ்நிலையில் தான் அதிநவீன காற்றாலை ஒன்றை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர் .



70  அடி உயரமுள்ள இந்த காற்றாலைகள் 21  அடி விட்டமுள்ள நவீன வட்ட வடிவ இறக்கையை தாங்கி நிற்கிறது .  அதி வேக காற்று வீசும் போது இந்த வடிவமைப்பு தானாகவே செங்குத்தான நிலையில் இருந்து காற்றின் போக்கில் மாறி விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .   மணிக்கு 118 மைல் வேகத்தில் காற்று வீசினாலும் இந்த காற்றாலைகள் தாங்கும் சக்தி கொண்டது 


குறைந்த பட்சமாக மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றிலும் இது இயங்கும் .   வருடத்திற்கு கிட்டத்தட்ட 18000 கிலோ வாட் ( 18 மெகா வாட் )  லிருந்து 30000 கிலோ வாட் ( 30 மெகா வாட் ) வரைக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது .


 டிஸ்கி : பசுமையான மின்சாரம் கொடுக்கும் பசுமையான திட்டம் .   வருக ... வெல்க ...

புதன், நவம்பர் 09, 2011

இந்தியாவின் இணையதள பயனர்கள் 100 மில்லியன் தாண்டியது - ஒரு தகவல்


 இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை வேகமாக உலகம் எங்கும் வளர்ந்து வருகிறது .   இந்த அசூர வளாச்சி இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது .   இதன் விளைவாக இந்தியாவின் மொத்த இன்டர்நெட் பயனர்கள் 112  மில்லியன்  ( செப்டம்பர் முடிவில் ) எனக் கணக்கிடப்பட்டுள்ளது .


 உலகம் முழுவதிலும் இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்களில் சீனா முதல் இடத்திலும்  ( 485 மில்லியன் ) ,  அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் ( 245 மில்லியன் ), தற்பொழுது இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது .   2013 ம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவை முந்தி முதல் இடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .  அட ...!

ஒவ்வொரு மாதத்திலும்  இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 5  முதல் 7  மில்லியன் அதிகமாகி வருகிறது என கணக்கிடப்பட்டுள்ளது .   அடுத்த 5  வருடங்களில் இந்தியாவின் மொத்த இணையப் பயனர்கள் 600 மில்லியன் யை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .  2015 ம் வருடத்தில் இணையத்தின் மூலம் சுமார் 20 பில்லியன் ரூபாய் அளவுக்கு இந்தியாவில் வியாபாரம் நடக்கும் என Associated Chambers of Commerce and Industry of India கூறியிருப்பது கூடுதல் தகவல் .
  

டிஸ்கி  :  உன்னை போல வேலை வெட்டி இல்லாமல் ப்ளாக் எழுதுகிறவர்கள் இருக்கும் போது 600  மில்லியன் என்ன 1000 மில்லியன் கூட இந்தியா தாண்டும் ..அப்படின்னு என்னை அன்போடு திட்டுகிற அன்பு நெஞ்சங்களுக்கு நான் சொல்லும் தகவல் என்னவென்றால் " இணையத்தை நன்கு பயன்படுத்துங்கள் ..  ஆனால்  நல்லதை மட்டும் பாருங்கள்  , நல்லதை மட்டும் கேளுங்கள் , நல்லதை மட்டும் பிறர்க்கு சொல்லுங்கள் "


செவ்வாய், நவம்பர் 08, 2011

தீ பற்றி கொண்டால் ... என்ன செய்ய வேண்டும் ..? - இன்று ஒரு தகவல்


நெருப்பு /  தீ பயன்படுத்தாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம் .  வீடுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் பல விபத்துகள் நெருப்பு மூலம் ஏற்ப்படுகிறது .  அப்படி ஏற்ப்பட்டால் என்ன எப்படி அந்த நெருப்பை அணைக்கவேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சம் ..


நெருப்பு என்றால் என்ன .?
வேகமாக ஆக்சிஜனேற்றம் பெற்று வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடும் தொடர் வேதி வினை தான் நெருப்பு என்று அழைக்கப்படுகிறது .   நெருப்பு என்பது நான்கு காரணிகள் உள்ளடக்கியது . 
  1. வெப்பம்
  2. ஆக்சிஜென்
  3. எரிபொருள்
  4. தொடர்வினை
மேற்கண்ட இந்த நான்கு காரணிகள் தான் நெருப்பை உண்டாக்குகின்றன .  அதனால் நெருப்பினால் ஆபத்துகள் உண்டாகும் போது இந்த காரணிகளை நாம் கட்டுபடுத்தினால் நெருப்பை கட்டுப்படுத்தலாம் .


இந்த நெருப்பு 4  வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவையாவன
  1. Class A நெருப்பு
  2. Class B நெருப்பு
  3. Class C நெருப்பு
  4. Class D நெருப்பு

 Class A தீ / நெருப்பு :

சாதாரணமாக பேப்பர்  ,  மரம் , துணி  போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது .  இந்த நெருப்பை அணைப்பதற்கு அந்த நெருப்பின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நெருப்பின் மீது நன்கு தண்ணீர் ஊற்றவேண்டும் .   தண்ணீர் வெப்பம் என்ற காரணியை எரிபொருளில் இருந்து நீக்கி விடுவதால் தொடர்வினை கட்டுக்குள் வருகிறது .  எனவே நெருப்பு அணைக்கப்படுகிறது .   இந்த மாதிரி நெருப்பை அணைப்பதற்கு Class A தீ அனைப்பான்களை ( Class A Fire Extinguishers )  பயன்படுத்தலாம் .


Class B தீ / நெருப்பு : 

எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது .   இந்த மாதிரி நெருப்பு ஏற்ப்படும் பொழுது சில சமயங்களில் முதல வகுப்பு தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தினது போல அநேகர் செய்கின்றனர் .  ஆனால் அது தவறான நடவடிக்கை 


 இந்த மாதிரி தருணங்களில் தண்ணீரை பயன்படுத்தினால் தண்ணீரை விட அடர்த்தி குறைந்த எண்ணெய் தண்ணீரின் மேல் வந்து விடும் காரணத்தாலும்  , வெப்பத்தினால் தண்ணீர் ( H2O ) பிரிந்து ஆக்சிஜென் மூலக்கூறுகள் பிரிவதினாலும் ,  நெருப்பு அதிகமாகும் .   எனவே இந்த வகையான நெருப்பை அணைக்க  CO2 கியாஸ் அல்லது சோப்பு நுரை அதிக அளவில் பயன்படுத்தினால் , நெருப்பிற்கு தேவையான ஆக்சிஜென் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்வினை நிறுத்தப்படும் 


Class C தீ / நெருப்பு : 

 மின்சார தீ இந்த வகையில் வருகிறது .  இப்படி தீ ஏற்ப்பட்டால் முதலாவது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் .  அதற்கு பிறகு எரிகிற பொருளை பொருத்து அது Class A தீயா அல்லாத B தீயா எனபதை அறிந்து அதற்கேற்ற தீ அனைப்பானை பயன்படுத்த வேண்டும் .

Class D தீ / நெருப்பு :  

தொழிற்சாலைகளில் உள்ள சோடியம்  , பொட்டாசியம் ,  டைட்டானியம் போன்ற உலோகங்களில் ஏற்ப்படும் தீ இந்த வகையை சேர்ந்தது .   சோடியம் க்ளோரைட்  எனப்படும் உப்பு மற்றும் Dry Chemical Powder போன்ற அனைப்பான்களை பயன்படுத்தலாம் .    


டிஸ்கி  :  பொதுவாக தீ பிடித்தால் நீங்கள் கீழ்க்கண்ட காரியங்களை கடைபிடியுங்கள்
  1. பதட்டப்படாதீர்கள் .  பதறிய காரியம் சிதறும்
  2. தீ தீ என்று சத்தமிட்டு அனைவரையும் உஷார் செய்யுங்கள்
  3. தீ அணைக்க கூடிய அளவில் இருந்தால் அணைக்க முயற்சி  செய்யுங்கள்
  4. பெரும் தீ என்றால் தீ அணைப்பு நிலையத்திற்கு அழைப்பு கொடுத்து விட்டு அவர்கள் அந்த இடத்தை அடைவதற்கு தேவையான் வசதிகளை செய்து கொடுக்கலாம் .
  5. உயிருக்கு கேடு என்றால் தயவு செய்து இடத்தை காலி செய்யுங்கள் .    உங்கள் உயிருக்கு முன் உடமைகள் ஒன்றும் அல்ல.


தலை சுற்றலா ? - எளிய மருத்துவம்


தலை சுற்றல் வந்து விட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது .   மாறாக எப்பொழுதும் படுத்து தான் இருக்க முடியும் .   இப்படிப்பட்ட தலை சுற்றலுக்கு என்ன எளிய மருத்துவம் உள்ளது என்பதை நாம் காணலாம் .


 கொத்தமல்லி , கசகசா ,  பருத்திவிதை இம்மூன்றையும் சம அளவு எடுத்து தூள் செய்து இரண்டு பங்கு நாட்டு சர்க்கரை  சேர்த்து  காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை போட்டு வெந்நீர் குடிக்க தலைசுற்று  , கிறுகிறுப்பு நீங்கும் .


அடிக்கடி தலைசுற்றல் இருந்தால் ரத்த அழுத்தம் இருப்பதாக் அர்த்தம் .  முற்றிய இஞ்சியை நசுக்கி பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுங்கள் .  தலைசுற்றும் நிற்க்கும்.  ப்ளட் பிரசரும் குறையும் .

ஏலக்காயை எடுத்து அதை இடித்து பனை வெல்லம் கலந்து சாப்பிட்டால் தலை சுற்று சுகமாகும் .

 
பித்தத்தினால் தலை சுற்றலா ..?  ஒரு துண்டு இஞ்சி ,  1  ஸ்பூன் சீரகம் ,  1  ஸ்பூன் தனியா ,  இவற்றை மிக்சியில் நைசாக அரைத்து வடிகட்டி , லேசாக சுட வைத்து , தேன் அல்லது சர்க்கரை சேர்த்து 1  மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து சாப்பிட தலை சுற்றல் பிரச்சினை குணமாகும் .

வெளியில் போய் விட்டு வந்தால் கண்களை இருட்டி கொண்டு தளி சுற்றுவது போல இருக்கும் .  கொட்டை புளி  , ஒரு துண்டு வெல்லம் ,  ஒரு ஸ்பூன் சீரகம்  மூன்றையும் ஒன்றாக நசுக்கி , உருட்டி , வாயில் அடக்கி கொண்டு , கண்களை இறுக மூடிக்கொண்டு  படுத்து கொள்ளவும் . தலையணை கூடாது .   இந்த ரசம் தொண்டையில் இறங்க இறங்க தலை சுற்றலும் குறையும் .

டிஸ்கி  :   தொடர்ந்து தலை சுற்றல் இருந்து வந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது .   எதை குறித்தும் கவலைபடாதீர்கள் .   ரத்த அழுத்தம் கூடினால் தலை சுற்றல் வரும் .   இடுக்கண் வருங்கால் நகுக .... எப்பொழுது நினைவில் வைத்து கொள்ளுங்கள் .

நன்றி : குலசை சுல்தான்

திங்கள், நவம்பர் 07, 2011

பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு வீடு - இன்று ஒரு தகவல்


பிளாஸ்டிக் பாட்டிலின் பயன்பாடு உலகமெங்கும் பெருமளவில் வியாபித்து விட்ட நிலையில் ,  சத்தமில்லாமல் நைஜீரியாவில் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு ஒரு வீடி கட்டி இருக்கிறார்கள் . 


 நைஜீரியாவின் சாலைகளிலும் ,  நீர் ஆதாரங்களிலும் நிறைந்து இருந்த பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது .   58 Sqm ( 624 சதுர அடி ) யில் அமைந்துள்ள இந்த வீட்டில் இரண்டு படுக்கை அறைகள் உள்ளது .   பிளாஸ்டிக் பாட்டில்களின் உள்ளே மணல் நிரப்பும் போது கிடைக்கும்  கிட்டத்தட்ட 3 கிலோ எடையுள்ள பாட்டில்கள் இந்த வீடு கட்ட உபயோகப்படுத்தப்பட்டுள்ளது .  இரண்டு அடுக்குகளாக வைத்து இந்த பாட்டில்கள் சிமெண்ட் வைத்து கட்டப்பட்டுள்ளது .


 பல வண்ணங்களில் உள்ள பாட்டிலின் மூடிகள் வீட்டின் உட்புறத்தில் தெரியும் படி அமைக்கப்பட்டுள்ளதால் அலங்காரமான் உள்ளறைகளை காண முடிகிறது .   பூமி அதிர்ச்சி  ,  தீ போன்ற ஆபத்துகளில் இருந்து இந்த வீடு தப்பும் என்றும் 19 டிகிரி வெப்பம் மட்டும் வீட்டின் உள் காணப்படும் எனவும் இதை வடிவமித்தவர் தெரிவித்துள்ளார் .

 மண்ணில் வீசப்படும் இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகும் என்பதால் இவற்றை இப்படி பயன்படுத்துவது வரவேற்கப்பட வேண்டும் என்றும் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார் .  70  சதவீத வீட்டு வேலை முடிந்துள்ள நிலையில் 14000 பாட்டில்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறதாம் .   இந்த வீட்டின் மின்சார தேவை சூரிய ஒளியில் இருந்து சந்திக்கப்படும் எனவும் தெரிகிறது .  இந்த நிலையில் 200000 பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி நைஜீரியாவில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டவும் இதை வடிவமைத்தவர் தீர்மானித்துள்ளது ஒரு கூடுதல் தகவல் .

 டிஸ்கி :  அட ....! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க .....! எப்படியோ வீணாய் போகிறதை உருப்படியா பயன்படுத்தினா சரி தான் .

LPG பயன்படுத்துபவரா நீங்கள்? - கொஞ்சம் கவனியுங்கள்


விறகு வைத்து சமையல் செய்த காலம் மாறி போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் .   அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( லிஃஉஎபிஎட் Petroleum Gas )  தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது .   அப்படி LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை நாம் பார்க்கலாம் .



LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே  ,  அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் .  சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு .   கீழ் உள்ள படத்தை பாருங்கள் .



LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே  ,  அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் .  சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு .   கீழ் உள்ள படத்தை பாருங்கள் .

சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி  எழுதப்பட்டிருக்கும் .  இதில் 4  ஆங்கில எழுத்துகள் ( A , B , C , D ) என்று வரும் .  இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு ( மார்ச் வரை )  ,  இரண்டாம்  காலாண்டு ( ஜூன் வரை ) , மூன்றாம் காலாண்டு ( செப்டம்பர் வரை ) ,  நான்காம் காலாண்டு ( டிசம்பர் வரை ) என்று பொருள்படும் .  தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .

மேற்கண்ட படத்தின் படி ,  இந்த சிலிண்டர் டிசம்பர் 2013 வரை பயன்படுத்தமுடியும் .

பொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது .  ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டுபண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது .  அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது .  ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .

பொதுவாக LPG ,  சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால்  , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் .   அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் ( கசிவு ஏற்பட்டால் )  திறந்து வைப்பது நல்லது .


சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக ( vertically ) தான் வைக்க வேண்டும் .  படுக்க ( Horizontally ) வைக்க கூடாது .  அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி ( Like Rocket ) தள்ளப்படும் .  அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது .

டிஸ்கி :  பாதுகாப்போடு சமையல் செய்யுங்கள் .   நீங்கள் சுகமாய் இருந்தால் தான் சமையல் சுவைக்கும் .


ஞாயிறு, நவம்பர் 06, 2011

USB யில் இத்தனை பயன்பாடா ..? - இன்று ஒரு தகவல்


USB என்று அழைக்கப்படும் Universal Serial Bus கணிப்பொறியுடன் உபகரணங்களை இணைக்க உதவும் தொழில்நுட்பம் .  பெரும்பாலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் தகவல்களை சேமிக்கும் டிரைவ் பயன்படுத்துகிறோம் .   ஆனால் USB யில் மேலும் சில பயன்பாடுகள் இருப்பதை பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது .  அவற்றில் சிலவற்றை நாம் பார்க்கலாம் ..

USB மைக்ரோ வேவன் : 


இதை பயன்படுத்தி நமது உணவுகளை சூடாக்கி கொள்ள முடியும் .   விலை கிட்டத்தட்ட 160 டாலர் இருக்குமாம் .
USB ஐஸ் பாக்ஸ்:


 குளிர்பானங்களின் குளிர்ந்த நிலையை பாதுகாத்து கொள்ளுங்கள் .   50 டாலர் வரை விலை இருக்கிறது 

 USB Rechargeable பாட்டரி :


USB பயன்படுத்தி நமது பாட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும் .  


USB Watch : 





USB Coffee Mug :

காபி கூட தயாரிக்கலாமாம்



டிஸ்கி :  என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா ....?  வருங்காலத்தில ஒரு கணிபொறி மாத்திரம் இருந்தால் போதும் என்கிற நிலை வரப்போகிறது போல ...