ஞாயிறு, நவம்பர் 20, 2011

பெரிய அலை மின் நிலையம் - இன்று ஒரு தகவல்


மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில்  , மின்சாரம் உற்பத்தி செய்யும் அணைத்து வழிகளையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அணைத்து நாடுகளும் முயன்று வரும் சூழலில் மிக பெரும் அலை மின் நிலையம் ஓன்று  பிரான்சின் கடல் பகுதியில் அமைக்கப்படுகிறது.



அயர்லாந்து வை தலைமையிடமாக கொண்ட Open Hydro என்ற நிறுவனம் இந்த அலை மின் நிலையத்தை நிறுவப்போகிறது.   850  டன் எடையுள்ள மிக பெரிய டர்பைன்கள் நான்கினை பிரான்சின் கடலில் பொறுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது .   இந்த டர்பைன்கள் ஒவ்வொன்றும் 2 MWe மின்சாரத்தை கொடுக்கும் சக்தி படைத்தவை .  


72  அடி விட்டமுள்ள இந்த டர்பைன்கள் கடலில் 115  அடி ஆழத்தில் நிறுவப்பட போகிறது .  2012 ம் ஆண்டில் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிற இந்த அலை மின் நிலையத்தின் மூலம் 4000  வீடுகளுக்கு தேவையான மின்சாரம் கொடுக்க முடியும் என நம்பப்படுகிறது ..

Related post



1 கருத்து:

  1. புதிய தகவல்.. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.

    பதிலளிநீக்கு