திங்கள், ஆகஸ்ட் 15, 2011

உனக்கு நிகர் யாருண்டு..?

திரும்ப திரும்ப

கரையிடம் மோதும்

அலைகளை பார் நண்பனே....!




எத்தனை முறை தோற்பினும்

விரக்தி உண்டோ அவற்றிடம்...?


முயற்சி மாத்திரம்

கண் முன்னே...

முன்னேறுவது மாத்திரமே

சிந்தையில்....



நண்பனே....


கடந்த கால தோல்வியால்

தலையணையில்

முகம் புதைப்பாயோ...?

கண்ணீரால் படுக்கையை

நனைப்பாயோ ...?



நிகழ்காலம்

உனதல்லவோ.......!

வருங்காலம் வெற்றியல்லவோ....!

சற்று தலை நிமிர்ந்து பார்....

தொலைவில் தெரிகிறதா

உன் வெற்றி.....?



தொட்டு விடும் தூரமே....

முயன்றுவிடு முழுவதும்......

மலைகள் குறுக்கிட்டால்

முட்டி மோதி விடு...



நெருப்பினால்

சுட்டெரிக்கப்படாமல்

அணிகலண் ஏது....?

கொல்லன் கையில்

அடிபடாத

மகுடம் ஏது...?



செய்து விடு....

செத்து விடாதே......

முடித்து விடு....

மடிந்து விடாதே....



ஏனென்றால்

என் கேள்விக்கு பதில் கூறு.....

உனக்கு நிகர் யாருண்டு..?

Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக