புதன், ஆகஸ்ட் 17, 2011

ஊழல் ஒழிப்பு - யார் கையில் ...? தீர்வு தான் என்ன ....?

ஊழல் ....... எங்கு பார்த்தாலும் இந்த வார்த்தை இப்போது பேசப்படுகிறது. ஊழல் ஒழிப்பு என்ற வார்த்தையும் எங்கும் தொனிக்கிறது. அன்னா ஹசாரே போன்ற மாபெரும் தியாகிகள் ஊழலை எதிர்த்து போராடுகின்றனர். அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் ஸ்தம்பிக்க வைக்கின்றனர். பாஜக போன்ற ஊழல் அற்ற (?) பரிசுத்தமான (?) கட்சிகள் கூட போராட்டம் செய்கின்றன. அப்பாவி மக்களும் போராட்டத்தில் பங்கு கொள்கின்றனர். கடந்த சில நாட்களாக நடக்கும் போராட்டங்கள் ஊழலை ஒழிக்கவா? அல்லது மக்களை ஆளும் ஆட்சிக்கு சங்கடம் உண்டாக்கவா? என்பதை குறித்து நமக்கு கவலை இல்லை. ஆனால் உண்மையில் ஊழல் எங்கு இருக்கிறது ? யார் இதை ஊக்குவிக்கிறார்கள் ? என்று நாம் கொஞ்சம் நினைத்து பார்த்தல் தலை கொஞ்சம் சுற்ற தான் செய்கிறது.



ஊழலை சட்டங்கள் முலம் திருத்த முடியுமா?

இந்த கேள்விக்கு பதில் முடியாது என்பது தான். கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஊழல் மற்றும் லஞ்சம் ஆகியவற்றை ஒழிக்க தான் லஞ்ச ஒழிப்பு துறை உருவாக்கப்பட்டது. ஆனால் என்ன நடக்கிறது? அதே துறையில் லஞ்சம் வாங்கியதை குறித்து செய்திகள் வாசிக்கின்றோம். எத்தனையோ நல்ல பல சட்டங்கள் இந்தியாவில் இருந்தாலும், அவைகளை மீறி ஊழல் நடக்க தான் செய்கிறது. ஒவ்வொரு கட்சியும் , பெரிய மனிதர்களும் ஒருவரை ஒருவர் குறைதான் சொல்லுகிறார்கள் தவிர தீர்வு சொல்ல யாரும் இல்லை.



ஊழலுக்கு தீர்வு தான் என்ன?

1 . தனிமனித உணர்வு : லஞ்சம் வாங்கும் எல்லாரும் திருந்த வேண்டும். இது எப்படியும் நடக்காத காரியம் என்பது நாம் எல்லாரும் அறிவோம். திருட்டு மாங்காய் தின்றவனுக்கு அதை விட முடியாது என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரியும்.

2 . தனிமனித எதிர்ப்பு : இது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு தனி மனிதனும் ஊழலுக்கு எதிராய் ஒத்துழையாமை இயக்கம் நடத்தனும். உதாரணதிற்கு ஒரு மரண சான்று வாங்குவதற்கு நாம் 100 ருபாய் செலவழிக்க தயங்குவதில்லை . அப்படியெனில் ஊழலை வளர்ப்பது நாம் தான் என்றால் கொஞ்சம் அதிர்ச்சி அல்லவா?



தனி மனிதனை அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தூண்டுபவன் தலைவன் அல்ல. தனிமனிதனை ஊழலுக்கு எதிராக உணர வைப்பவனே தலைவன். இது கொஞ்சம் வித்தியாசம் அல்லவா. நீ எதுவும் லஞ்சமாக கொடுக்காதே , லஞ்சத்தை ஊக்குவியாதே ! லஞ்சம் தானாக அழியும்.



நண்பனே ...! ஊழல் ஒழிப்பு யார் கையில் ? அன்னா ஹசாரே கையிலா ? கட்சிகளின் கையிலா ? இல்லை .... அது உன் கையில் மற்றும் என் கையில்.

Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக