திங்கள், செப்டம்பர் 12, 2011

சரித்திரத்தின் வியப்பு - இன்று ஒரு தகவல்


 
ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் எப். கென்னடி இவர்களை குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாதுஆனால் இவர்கள் இருவரின் வாழ்விலும் நடந்த சில நிகழ்வுகள் சரித்திரத்தில் ஒரு வியப்பு என்றால் மிகை ஆகாது.



  
 


மாண்பு மிகு   ஆபிரகாம் லிங்கன்
மாண்பு மிகு   ஜான் எப். கென்னடி


இவர் US காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம்  1846
இவர் US காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம்  1946


இவர் அமெரிக்காவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம்  1860
இவர் அமெரிக்காவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம்  1960

இருவரும் மனித உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள்

இருவரின் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வசிக்கும் போது தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள்

இருவரும் வெள்ளிக்கிழமையில் தலையில் சுடப்பட்டு இறந்தார்கள்


லிங்கனின் காரியதரிசியின் பெயர் கென்னடி
கென்னடியின் காரியதரிசியின் பெயர் லிங்கன்


லிங்கன் அவர்களை கொலை செய்த ஜான் வில்கெஸ் பூத் 1839  வருடத்தில் பிறந்தான்
கென்னடி அவர்களை கொலை செய்த லீ ஹார்வே ஆஸ்வால்ட் 1939 ம் வருடத்தில் பிறந்தான்


லிங்கன் போர்ட் என்று அழைக்கப் பட்ட தியேட்டரின்  முன் சுடப்பட்டார்  

கென்னடி போர்ட் கம்பனியின் லிங்கன் என்ற காரில் செல்லும்போது சுடப்பட்டார்


லிங்கனை சுட்டவுடன் தியேட்டரில் இருந்து பண்டக சாலைக்கு கொலைக்காரன் தப்பி சென்றான்
கென்னடியை சுட்டவுடன் பண்டக சாலையில் இருந்து தியேட்டருக்கு கொலைக்காரன் தப்பி சென்றான்

பூத் மற்றும் ஆஸ்வால்ட் இரண்டு பெரும் வழக்கு முடிவதற்கு முன்பு கொல்லப்பட்டனர்


பல விஷயங்களில் ஓன்றுபட்டிருக்கும்  மாண்புமிகு லிங்கன் மற்றும் கென்னடி சரித்திரத்தின் ஒரு வியப்பு தானே...!

Related post



3 கருத்துகள்: