புதன், அக்டோபர் 12, 2011

ஹெல்மெட்டில் மின்சாரம் - ஒரு சுவாரசிய தகவல்


இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் ( அதாங்க HELMET ) அணிய வேண்டும் என்று எத்தனை முறை அரசாங்கம் சொன்னாலும் அதெல்லாம் கொஞ்சம் கூட காதில் வாங்காமல் ஹாயாக ஹெல்மெட் அணியாமல் செல்லும் நம் அநேகர் மத்தியில் பிரக்னேஷ் மற்றும் அலோக் பட் என்ற இரண்டு மாணவர்களும் வித்தியாசமானவர்கள்.  அகமதாபாத்தில் உள்ள நிர்மா பல்கலைகழகத்தில் பயிலும் இவர்கள் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர்.



ஹெல்மெட்டை செல் போன் ( அலை பேசி )  சார்ஜ் செய்வதற்கு பயன்படுத்த முடியும் என்கிறது இந்த மாணவர் குழு.   சூரிய ஒளி மற்றும் காற்றை பயன்படுத்தி 40  நிமிடங்களுக்குள் ஒரு அலைபேசிக்கு தேவையான மின்சாரத்தை தயார் செய்ய முடியும் என்பதே அந்த கண்டுபிடிப்பு.   இந்த கண்டுபிடிப்பின் மூலம் தலைக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகமாகும் என எதிர்பார்க்க படுவதால் விபத்துகள் மூலம் உயிர் இழப்பு கணிசமாக குறையவும் வாய்ப்புள்ளது.  அட ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...!   மிக குறைந்த விலையில் அதாவது 1000  ரூபாயில் இந்த தலைக் கவசத்தை கொடுக்க முடியும் என்கிறார்கள் இந்த மாணவ கண்டுபிடிப்பாளர்கள்.    வாழ்த்துகள் நண்பர்களே ....



Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக