சனி, அக்டோபர் 15, 2011

போர்ட் வாகனத்தில் தேங்காய் நார் - புதிய தொழில்நுட்பம்


கடந்த இரண்டு வருடங்களாக சுற்று சூழலுக்கு சாதகமான பொருட்களை பயன்படுத்துவதில் போர்ட் வாகன உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.   பிரசித்தி பெற்ற இந்த வாகன உற்பத்தியாளர்கள் இதற்க்கு முன் வாகன டஷ்போர்ட் போன்றவற்றை CASTOR OIL நுரையிலும் ,  காரின் உள்பகுதிகளை மறுசுழற்சி செய்யக்கூடிய ரெசின் பயன்படுத்தியும் தயாரித்து வந்தனர்.  ஆனால் சமீபமாக இவற்றுக்கு மாற்றாக தேங்காய் நாரை பயன்படுத்தி போர்ட் நிர்வாகம் சில மாற்றங்களை உண்டு பண்ணியுள்ளது.


தேங்காய் நாரில் இருந்து கதவுகள் , இருக்கை வசதிகள் மற்றும் உள் அலங்காரம் போன்றவை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   அதனால் நீடித்து உழைக்கும் வாகனங்கள் உருவாக்கப்படுவதோடு எளிதாக மறு சுழற்சி செய்யவும் வைப்பு உண்டாகும்.

இவைகள் மிக குறைந்த எடை உள்ளவைகளாய் இருப்பதினால் ,  எரிபொருள் பயன்பாடு கணிசமான அளவு குறையும் என்பது கூடுதல் தகவல்.    இதே போல் பல சுற்று சூழலுக்கு சாதகமான பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த ஆய்வுகள் நடைபெற்று வருவதாக போர்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிஸ்கி :   வருக ... வருக ... என்று வரவேற்கிறோம்.    விலையை கொஞ்சம் குறைப்பீங்க தானே ....  பார்க்கலாம் ..!

Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக