ஞாயிறு, அக்டோபர் 09, 2011

தண்ணீர் இல்லை ௦- அவசர நிலை பிரகடனம் - ஒரு பகீர் ரிப்போர்ட்


ஒன்பது சிறிய தீவுகள் நிறைந்த TUVALU என்ற சிறிய நாடு பசுபிக் பிரதேசத்தில் உள்ளது.  நாலாப்புறமும் கடலால் சூழப்பட்ட இந்த தீவு 25 .63  ச.கிமீ பரப்பளவு உடையது.  சுமார் 10000 பேர் குடியிருக்கிறார்கள்.   இந்த தீவு மிக பெரிய ஒரு சவாலை சந்தித்திருக்கிறது.   குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளதால் அந்த குட்டி நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுளது என்பது பெரும் அதிர்ச்சி தரும் தகவல் ஆகும். 
 
 (குட்டிதீவின் அழகிய தோற்றம்)

கடல் மட்டத்தில் இருந்து 5  மீ உயரத்தில் இருக்கும் இந்த குட்டி நாடு மாறி வரும் பருவ சூழ்நிலைகளால் கடல் மட்டம் பெருகி வருவதால் தன்னுடைய குடிநீரை இழந்திருக்கிறது.    தற்பொழுது இந்த குட்டி நாட்டில் ரேசன் முறையில் நல்ல தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.  அதாவது தலை நகரான Funafuti ல் வசிப்பவர்களுக்கு இரண்டு வாளி தண்ணீர் வழங்கப்படுகிறது.  அதுவும் இன்னும் சில நாட்களுக்கு மட்டும் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது

இதே போன்ற பருவ மாறுபாடுகளினால் கடல் மட்டம் உயருவதினால் பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் உள்ள அநேகம் குட்டி நாடுகளுக்கு இந்த நிலை வரும் காலம் சீக்கிரத்தில் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பு :  தண்ணீர் இல்லாமல் வாடும் அந்த குட்டி நாட்டுக்காக ஒரு நிமிடம் நாம் பிரார்த்தனை செய்வோம்.   இது நம் எல்லாருக்கும் ஒரு எச்சரிக்கை.  வெகு வேகமாக உலகம் வெப்பமடைந்து வருகிறது.  இன்னும் கொஞ்ச காலத்தில் நல்ல தண்ணீர் இல்லாத ஒரு உலகத்தில் பிரவேசிக்க போகிறோம் என நினைக்கவே அச்சமாக உள்ளது.  இதை தடுக்க நாம் என்ன செய்யலாம்.  
 
1 .  வீட்டிற்க்கொரு மரம் வளர்ப்போம்.
2 .  கூடுமான மட்டும் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்போம்.
3 .  மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை பாதுகாப்போம்.
4 .  நல்ல தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்

 

Related post



1 கருத்து: