நாளுக்கு நாள் குடிமகன்களின் ( Citizen ) எண்ணிக்கை கூடி வருகிறது போல குடி மகன்களின் ( Drunkards ) எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது . சிறு வயதினர் ஏதோ ஜாலிக்காக ஆரம்பிக்க போய் , இப்பொழுது துக்கம் , சந்தோசம் எல்லாவற்றிலும் குடி முக்கியத்துவம் பெறுகிறது . குடி குடியை கெடுக்கும் என்பது நமக்கு நன்கு தெரிந்தது தான் ஆனால் குடி உங்களையே அழிக்கும் என்பதை நாம் கொஞ்சம் பார்க்கலாம் .
குடி மகன்களின் / குடி மகள்களின் மூளை பாதிக்கப்படுமாம் . இதனால் மன நிலை பாதிக்கப்படுவதுடன் , நியாபக சக்தியும் குறையுமாம் . 65 சதவீத தற்கொலைகள் அதிகப்படியான குடியினால் நிகழ்வதாகவும் , மூன்றில் ஒரு பங்கு இல வயதினர் குடியினால் தங்களை அளித்து கொள்வதாகவும் ஒரு ஆய்வு சொல்லுகிறது .
அதிகபடியாக குடிக்கும் குடிமகன்களுக்கு இலவச இணைப்பாக வாய் மற்றும் தொண்டையில் கேன்சர் வருவதற்கு வாய்ப்புள்ளது . பெண்களுக்கு மார்பக புற்று நோய்கள் தாக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது .
குடிமகன்கள் குடியினால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு வந்து உடனடியாக சொர்க்கத்திற்கு போகும் வாய்ப்பும் உள்ளது .
அதிகப்படியாக குடித்தால் நுரையீரல் பாதிக்கப்படும் . குடித்த பின் வாந்தி எடுத்தால் , அந்த வாந்தி நுரை ஈரலில் சிக்கி அபாய நிலைக்கும் கொண்டு போகும் .
வயிற்று பகுதியில் அல்சர் உருவாகி அங்கும் கேன்சர் உருவாகும் வாய்ப்பு உள்ளது
மேலும் கிட்னி , எலும்புகள் , தோல் எல்லாவற்றியும் பாதிக்குமாம்
அட ...! இவ்வளவு விடயங்களா என்று நாம் யோசித்து கொண்டு இருக்கும் போதே , எத்தனயோ குடிமகன்கள் சாராய கடையின் வாசலில் தவம் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வலிக்க தான் செய்கிறது .
டிஸ்கி : ஆமாம் இவ்வளவு விஷயம் இருக்கிறதே , பின் ஏன் அரசாங்கமே மதுவை விற்க வேண்டும் என்ற கேள்வியை நானே பல முறை கேட்டிருக்கிறேன் . குடி குடியை கெடுக்கும் என்று பாட்டிலின் மேல் எழுதினாலும் குடி நாட்டிற்க்கும் வீட்டிற்கும் கேடு என்று வாசித்தாலும் கொஞ்சம் கூட அசராமல் தண்ணி அடித்து விட்டு அலப்பறை விடும் சகோ. களை பார்க்கும் போதும் ஒரு கேள்வி மாத்திரம் கேட்க தோன்றுகிறது ..." நண்பா ....சாவதற்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாயே ..., ஒரு நாளாவது நீ வாழ்வதற்கு ரிஸ்க் எடுத்தது உண்டா ...?"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக