செவ்வாய், நவம்பர் 15, 2011

டெங்கு... டெங்கு .... கவனம் ...கவனம்


டெங்கு என்ற பெயரை கேள்விப்படாதவர் யாரும் இருக்க முடியாது என்பது எனது எண்ணம் .   மிக மோசமான இந்த காய்ச்சல் மனித உயிர்களை அள்ளி செல்லும் வல்லமை படைத்தது .  இப்பொழுதும் ஆங்காங்கு டெங்கு அறிகுறி தோன்றுவதால் , இந்த டெங்கு காய்ச்சல் குறித்து சில காரியங்களை நாம் காணலாம் .


டெங்கு காய்ச்சல் ஒரு வைரஸ் குடும்பத்தினால் பரவுகிற காய்ச்சல் .  இந்த வைரஸ்கள் கொசுக்களின் மூலமாக பரவுகின்றன ..

 டெங்குவின் அறிகுறிகள்  :

  1. தலை வலி
  2. காய்ச்சல்
  3. முழு சோர்வு
  4. மூட்டுகளில் மற்றும் தசைகளில்  கடுமையான வலி
  5. சுரப்பிகளில் வீக்கம்
  6. குமட்டல் மற்றும் வாந்தி

 டெங்கு காய்ச்சலுக்கு எந்த மருந்தும் கிடையாது என்பது தான் உண்மை .   ஆனால் டெங்கு காய்ச்சலின் மூலம் வருகிற அறிகுறிகளான வியாதிகளுக்கு தான் மருந்துகள் தரப்படுகிறது.


கடுமையான வயிற்று போக்கு டெங்கு காய்ச்சலின் உச்சம் .  

டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது நமது கரங்களில் தான் இருக்கிறது .  அண்ணன் கொசு நமது வீட்டிற்குள் நுழையக்கூடாது . அவ்வளவு தான் .... அதற்க்கு சில காரியங்களை செய்யலாமே ....

  1. தேங்கி நிற்கும் தண்ணீரை சுத்தம் செய்தல்
  2. குப்பைகளுக்கு குட்பை சொல்லுதல்
  3. வீட்டினுள் துணி மணிகளை மடித்து பெட்டிகளில் வைத்தல்
  4. தூங்கும் போது கொசு வலைகளை பயன்படுத்தல் ..

 டெங்கு ஒரு உயிர்க்கொல்லி தான் ... ஆனால் பாதுகாப்பாயிருந்தால் சுகமான வாழ்வு நிச்சயம் உண்டு

டிஸ்கி :  டெங்குக்கு அடிப்போம் சாவு மணி ......! 


Related post



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக