டெங்கு என்ற பெயரை கேள்விப்படாதவர் யாரும் இருக்க முடியாது என்பது எனது எண்ணம் . மிக மோசமான இந்த காய்ச்சல் மனித உயிர்களை அள்ளி செல்லும் வல்லமை படைத்தது . இப்பொழுதும் ஆங்காங்கு டெங்கு அறிகுறி தோன்றுவதால் , இந்த டெங்கு காய்ச்சல் குறித்து சில காரியங்களை நாம் காணலாம் .
டெங்கு காய்ச்சல் ஒரு வைரஸ் குடும்பத்தினால் பரவுகிற காய்ச்சல் . இந்த வைரஸ்கள் கொசுக்களின் மூலமாக பரவுகின்றன ..
டெங்குவின் அறிகுறிகள் :
- தலை வலி
- காய்ச்சல்
- முழு சோர்வு
- மூட்டுகளில் மற்றும் தசைகளில் கடுமையான வலி
- சுரப்பிகளில் வீக்கம்
- குமட்டல் மற்றும் வாந்தி
டெங்கு காய்ச்சலுக்கு எந்த மருந்தும் கிடையாது என்பது தான் உண்மை . ஆனால் டெங்கு காய்ச்சலின் மூலம் வருகிற அறிகுறிகளான வியாதிகளுக்கு தான் மருந்துகள் தரப்படுகிறது.
கடுமையான வயிற்று போக்கு டெங்கு காய்ச்சலின் உச்சம் .
டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது நமது கரங்களில் தான் இருக்கிறது . அண்ணன் கொசு நமது வீட்டிற்குள் நுழையக்கூடாது . அவ்வளவு தான் .... அதற்க்கு சில காரியங்களை செய்யலாமே ....
- தேங்கி நிற்கும் தண்ணீரை சுத்தம் செய்தல்
- குப்பைகளுக்கு குட்பை சொல்லுதல்
- வீட்டினுள் துணி மணிகளை மடித்து பெட்டிகளில் வைத்தல்
- தூங்கும் போது கொசு வலைகளை பயன்படுத்தல் ..
டெங்கு ஒரு உயிர்க்கொல்லி தான் ... ஆனால் பாதுகாப்பாயிருந்தால் சுகமான வாழ்வு நிச்சயம் உண்டு
டிஸ்கி : டெங்குக்கு அடிப்போம் சாவு மணி ......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக