கையை கட்டி, வாயை கட்டி 24 மணி நேரமும் வேலை பார்த்து, குருவி சேர்ப்பது போல சேர்த்து நிலம் வாங்க போனால் , அம்மாடியோவ் ஆளை விட்டால் போதும்... ஒரு சென்ட் நிலம் வாங்க கூட பணம் இல்லை என புலம்பும் சொந்தங்கள் அநேகம் பேர் உண்டு.
அப்படியே கஷ்டப்பட்டு வாங்கிட்டாலும் , அதை மத்தவங்க கையிலிருந்து காப்பற்றுவதர்க்குள் தலையில் உள்ள முடியெல்லாம் கொட்டி ஏன்டா இந்த நிலத்தை வாங்கினோம் என்று கதறும் உறவுகளும் அநேகர் உண்டு..
உங்கள் எல்லாருக்கும் ஒரு ஆச்சரியமூட்டும் சந்தோஷ செய்தியை சொல்லுகிறேன். காதை நல்ல கூர் தீட்டி கொள்ளுங்கள். குறைந்த விலையில் ஏக்கர் கணக்கில் நிலம் கிடைக்கிறது என்றால் நம்புவீர்களா? . அதுவும் 1 ஏக்கர் வெறும் 1500 ரூபாயில் என்றால். இப்போதே அநேகர் என்னை திட்டுவது எனக்கு கேட்கிறது. ஆனால் உண்மை. நம்புங்கள் .... 1 ஏக்கர் மற்றும் 10 ஏக்கர்களாக பிரித்து கொடுக்கப்படுகிறது.
ஆனால் , ஒரு சின்ன விஷயம் , நிலம் மட்டும் நம்ம பூமியில் இல்லை , பூமிக்கு பக்கத்தில இருக்கிற சந்திரன் , புதன் மற்றும் செவ்வாய் கோள்களில் இருக்கு. உடனடி பத்திரபதிவு முந்துங்கள் ....
எவன் வீட்டு நிலத்தை எவன் விக்கிறது அப்படின்னு கேட்டிங்கன்னா தயவு செய்து என்னிடம் கேட்காமல் MOONESTATES .COM யை கிளிக் பண்ணி அவனை கேளுங்க ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக