இவை எல்லாம் ஒரு பக்கம் ஒரு நிம்மதியை கொடுத்தாலும் பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவத்தை சேவையாக நினைகின்றனரா அல்லது தொழிலாக செய்கின்றனரா என்பது தான் நம்மை போன்ற பொது ஜனத்தின் சந்தேகம். நேற்று நான் சந்தித்த ஒரு சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தபடியால் இந்த பதிவை எழுத வேண்டிய கட்டயதிற்குள் வந்து விட்டேன். ஒரு 60 வயது தாயார் ஒருவர் நெஞ்சு வலியின் காரணமாக ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்திருந்தார். மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அந்த தருணத்தில் நிலைமை மருத்துவருக்கு அறிவிக்கப்பட்ட பிறகும் , தன்னை நாடி வந்திருந்த மருந்து விற்பனை பிரதிநிதிக்கு சமயம் கொடுத்து தங்கள் வியாபாரத்தை பேச ஆரம்பித்து விட்டார். வேறென்ன சொல்லுவது. நெடு நேரம் காத்திருந்த அந்த முதியவர் வேறு மருத்துவமனையை நாடி சென்றது தான் கொடுமை.
என்ன நினைக்கிறார்கள் இந்த மருத்துவர்கள். பல லட்சம் செலவழித்து மருத்துவம் படித்தால் பணத்தை குறித்து அக்கறை வராமல் வேறென்ன வரும் என்கிறார் இந்த பொது ஜனம். நாமும் வேறென்ன சொல்லுவது . நோயாளிகளிடம் காண்பிக்கும் அக்கறையை விட மருந்து விற்பனை பிரதிநிதிக்கு கொடுக்கும் முக்கியத்திற்கு வேறென்ன காரணம் இறக்க முடியும்...? தரம் குறைந்த மருந்துகளை பரிந்துரைக்க அவர்களுக்கு கிடைக்கும் அற்ப பணத்திற்காகவும் வெகுமதிக்காகவும் அல்லாமல் வேறெதற்கு? சுகாதாரத்தை பேண வேண்டிய மருத்துவமனைகள் சிலவற்றில் நுழைந்தவுடன் ஏற்படும் வாசனை (?) சகிக்கமுடியாது. ஏன் அதை கூட சரி பண்ண மருத்துவர்களுக்கு சமயம் கிடைக்கவில்லை போலும். என்ன சொல்லுவது ... என்னவோ யாதோ என பயந்து வரும் நோயாளிகளை பார்த்து ஒரு புன்முறுவல் கூட செய்யாமல் தங்கள் மேதாவித்தனத்தை காட்டும் மருத்துவர்களும் உண்டு.....
ஆனாலும் எல்லா மருத்துவர்களும் அப்படி என்று சொல்ல முடியாது. கடுமையான விபத்தில் சிக்கி கால்கள் ஒடிந்த நிலையில் ஒரு வாலிபன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது , ஒரு மருத்துவர் கையில் அணிவதற்கு கையுறை தேடி கொண்டிருக்க, தற்செயலாய் அந்த பக்கம் வந்த இன்னொரு மருத்துவர் தான் நல்ல ஆடைகளை அணிந்துருந்தும் அதை பொருப்படுத்தாது ஓடி சென்று தனது கைகளினால் அந்த கால்களை தாங்கி பிடித்த காட்சியையும் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். வெறும் 25 ருபாய் , 50 ருபாய் மாத்திரம் பீஸ் வாங்கும் மருத்துவர்கள் 80 கிமீ பிரயாணம் செய்து வந்து மருத்துவம் பார்ப்பதையும் அறிந்திருக்கிறேன்.
ஆனால் கடவுளுக்கு அடுத்தபடியாக போது ஜனம் இவர்களை நினைத்திருக்க , மருத்துவம் என்ற புனிதமான சேவை வியாபாரம் ஆகும் கொடுமை தீர்ந்தால் தான் உண்மையான சேவை செய்யும் மருத்துவர்கள் கூட மதிக்கப்படும் நிலை வந்திருக்கிறது என்றால் , அது கூட மறுக்க முடியாது என்றே நினைக்கிறன் |
நல்ல பதிவு.
பதிலளிநீக்கு@Rathnavel : ஐயா தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி
பதிலளிநீக்கு