வியாழன், நவம்பர் 03, 2011

புகை பிடிப்பவரா நீங்கள் .....? இதை கொஞ்சம் பாருங்கள்


புகை பிடிக்கும் பழக்கம் 3000  வருடங்களுக்கு முன்பாகவே இந்த உலகில் தோன்றி உள்ளது என் ஆய்வுகள் தெரிவிக்கின்றன .   இன்றைய உலகில் புகை பிடிப்பது ஒரு ஸ்டைலான காரியமாக மாறி உள்ளது .  டென்ஷன்  ஆனால் தான் புகை பிடிக்கிறோம் என அநேகர் சாக்கு சொல்லுகிற போது   அநேகம் இளைஞர்கள் .., ஏன் மாணவர்கள் கூட புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்  என்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது .  உண்மையில் இந்த புகை பிடிப்பதால் வருகிற காரியங்களை கொஞ்சம் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது .


சிகரட்கள் கிட்டத்தட்ட 4000  வேதிபொருட்களை கொண்டுள்ளது அவற்றில் 100 க்கும் மேற்பட்ட நச்சு பொருட்கள் உள்ளன என்பது கொஞ்சம் அதிர்ச்சி கலந்த உண்மை .  தகவலுக்கு :  http://quitsmoking.about.com/od/chemicalsinsmoke/a/chemicalshub.htm .   சிகரெட்டில் கலந்துள்ள பொருட்களை அறிந்து கொள்ள கொஞ்சம்  http://quitsmoking.about.com/cs/nicotineinhaler/a/cigingredients.htm பாருங்கள் .
  
  1. சிகரெட்டில் உள்ள நிகோட்டின் புகையை உள் இழுக்க ஆரம்பித்த 10 வினாடிகளுக்குள் மூளையை சென்று அடைந்து விடும் .  இது உடலின் எல்லா பகுதிகளிலும் கலந்து இருக்கும் .   புகை பிடிக்கும் பெண்களின் தாய்ப்பாலில் கூட இந்த நச்சு இருக்குமாம் .
  2. சிகரெட்டில் உள்ள கார்பன் monaxide  ரத்த சிவப்பணுக்களின் ஹீமோ க்ளோபினை பாதித்து உடலுக்கு தேவையான ஆக்சிஜென் கிடைக்காமல் செய்து விடும் .
  3. சிகரெட்டில் உள்ள கான்சர் உருவாக்கும் நச்சு பொருட்கள் ,  செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முக்கியமான ஜீன்களை பாதித்து  அவற்றின் மூலம் ஒழுங்கற்ற செல் வளர்ச்சி உண்டாகி கான்சர் உருவாகிறது .
  4. புகை பிடிப்பதினால் சுவாச மண்டலம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது .
  5. சேதமடைந்த செல்களை சரி செய்யும் antioxidants அளவு ரத்தத்தில் புகை பிடிப்பதின் மூலம் குறைகிறது .
  6. புகை பிடிப்பவர் தனக்கு மட்டும் அல்லாமல் தன அருகில் நிற்ப்பவருக்கும் இதே பாதிப்பை ஏற்ப்படுதுகிறார் .


இத்தனை பாதிப்புகளை ஏற்ப்படுத்தும் இந்த புகை பழக்கத்திற்கு எதிராக கடுமையான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த சமுதாயம் உள்ளது .   என்ன தான் சொன்னாலும் சம்பந்தப்பட்ட நீங்கள் முடிவு எடுத்தால் தான் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடிகோல முடியும் .


டிஸ்கி :  இந்த கட்டுரையை எழுதும் போது எனக்கு  இரண்டு காரியங்கள் நியாபகத்திற்கு வருகிறது .

  1. கடவுள் மனிதன் புகை பிடிக்க வேண்டும் என நினைத்திருந்தால் அவனது மூக்கு தலைக்கு மேலே புகை போக்கி போல வைத்திருக்கலாம் .
  2. ஒரு சிகரெட்டின் அளவு குறைய குறைய அதை புகைப்பவரின் ஆயுளும் குறைந்து கொண்டிருக்கிறது .

Related post



3 கருத்துகள்:

  1. என்ன கொடுமை ..அதிலும் இந்த கொடுமையை புகை பிடிக்காதவர்களும் அவர்கள் அருகிலிருப்பதால் அனுபவிக்கவேண்டியுள்ளது ...

    பதிலளிநீக்கு
  2. அண்ணே ... வாங்க ...! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    //டிஸ்கி செம நக்கல் +கலக்கல் !//
    ஹி .. ஹி ... எல்லாம் உங்ககிட்ட கத்துகிட்டது தான் . நன்றி

    பதிலளிநீக்கு