சனி, செப்டம்பர் 03, 2011

சாதி என்பதோர் வியாதி ....


"சாதிகள் இல்லையடி பாப்பா "
சொன்னவர் 
மறைந்தார் அன்றே ....!
சாதி வெறியை 
தூண்டியே வாழ்கிறார் 
சிலர் இன்றே ....!

சாதி சாதி என்று 
சாகும் மனிதா....
சாதியில் பிரிவு 
எப்படி பிரித்தாய் ..?

நீயும் நானும் 
வேறு சாதி என்றால் 
நம்மை படைத்த 
இறைவன் எந்த சாதி ....?
இறைவனுக்கு சாதி
இல்லையெனில் ...
எங்கிருந்து வந்தது 
இந்த வியாதி ....?

சாதி தருமா உயர்வு  ....?
சாதி தருமா வாழ்வு ....?
பின்
சாதியில் என்ன தாழ்வு ...?

ஆறடி குழிக்குள் அடங்கும்
ஆறறிவு மானுடா...
சாதி என்பதோர் வியாதி ...
சில மூர்க்கர்கள் செய்த சதி ....

சாதிகள் இல்லையென்று
சப்தமாய் கூறு........
முழங்கட்டும்  சமூகம்..
மனிதம் வாழ்கவென்று ....!

Related post



9 கருத்துகள்:

  1. //
    சாதி சாதி என்று
    சாகும் மனிதா....
    சாதியில் பிரிவு
    எப்படி பிரித்தாய் ..?


    //

    நல்ல கேள்வி

    பதிலளிநீக்கு
  2. //
    சாதிகள் இல்லையென்று
    சப்தமாய் கூறு........
    முழங்கட்டும் சமூகம்..
    மனிதம் வாழ்கவென்று ....!
    //
    இப்படி இருந்தால் நல்லதுதான்

    பதிலளிநீக்கு
  3. வாருங்கள் நண்பரே .. தங்கள் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. அருமையான பகிர்வு
    அழுத்தமாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. வாருங்கள் ஐயா , தங்கள் ஊக்கத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. கவிதையின் எதுகை மோனைகள் அழகாக இருக்கின்றன.எளிதாகவும்,சுருங்க சொல்லி விளங்க வைப்பது கவிதைகள் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  7. @ ராஜ நடராஜன்

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் கேட்கும் கேள்விகள் எல்லாமே நியாயமானவை. ஆனால் பதில் சொல்லத்தான் மனிதர்கள் இல்லை.

    பதிலளிநீக்கு
  9. @ பாலா : தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு