"சாதிகள் இல்லையடி பாப்பா "
சொன்னவர்
மறைந்தார் அன்றே ....!
சாதி வெறியை
தூண்டியே வாழ்கிறார்
சிலர் இன்றே ....!
சாதி சாதி என்று
சாகும் மனிதா....
சாதியில் பிரிவு
எப்படி பிரித்தாய் ..?
நீயும் நானும்
வேறு சாதி என்றால்
நம்மை படைத்த
இறைவன் எந்த சாதி ....?
இறைவனுக்கு சாதி
இறைவனுக்கு சாதி
இல்லையெனில் ...
எங்கிருந்து வந்தது
இந்த வியாதி ....?
சாதி தருமா உயர்வு ....?
சாதி தருமா வாழ்வு ....?
பின்
சாதியில் என்ன தாழ்வு ...?
ஆறடி குழிக்குள் அடங்கும்
ஆறறிவு மானுடா...
சாதி என்பதோர் வியாதி ...
சில மூர்க்கர்கள் செய்த சதி ....
சாதிகள் இல்லையென்று
சப்தமாய் கூறு........
முழங்கட்டும் சமூகம்..
மனிதம் வாழ்கவென்று ....!
//
பதிலளிநீக்குசாதி சாதி என்று
சாகும் மனிதா....
சாதியில் பிரிவு
எப்படி பிரித்தாய் ..?
//
நல்ல கேள்வி
//
பதிலளிநீக்குசாதிகள் இல்லையென்று
சப்தமாய் கூறு........
முழங்கட்டும் சமூகம்..
மனிதம் வாழ்கவென்று ....!
//
இப்படி இருந்தால் நல்லதுதான்
வாருங்கள் நண்பரே .. தங்கள் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு
பதிலளிநீக்குஅழுத்தமாகச் சொன்னீர்கள்.
வாருங்கள் ஐயா , தங்கள் ஊக்கத்திற்கு நன்றி
பதிலளிநீக்குகவிதையின் எதுகை மோனைகள் அழகாக இருக்கின்றன.எளிதாகவும்,சுருங்க சொல்லி விளங்க வைப்பது கவிதைகள் மட்டுமே.
பதிலளிநீக்கு@ ராஜ நடராஜன்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி
நீங்கள் கேட்கும் கேள்விகள் எல்லாமே நியாயமானவை. ஆனால் பதில் சொல்லத்தான் மனிதர்கள் இல்லை.
பதிலளிநீக்கு@ பாலா : தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்கு