வியாழன், அக்டோபர் 27, 2011

கருவில் கலையும் கனவுகள்

இப்போதெல்லாம் கண்ணை மூடினாலே ...

கனவுகள் தான்....

நினைவுகள் எல்லாம் ...

நிஜமாக போகிற உற்சாகம் ......



                இன்னும் மாதம் எட்டு தான்...

                சூழ்ந்துள்ள இருட்டில் இருந்து

               விடுதலை....

               புது வாழ்வின் புத்தொளி நோக்கி

               பூத்திருக்கும் கண்கள்....



அன்னையின் முகம் ....

ஹா... நினைத்தாலே சுகமல்லோ.....!

தந்தையின் பரிவு.....

ஏதுண்டு இதற்கிணை....!


              கற்பனை குதிரை

              தறிகெட்டு ஓட....

             வானோர் எல்லாம்

             வாழ்த்துவது போலவும் ............

             பூலோகத்தார் எல்லாம்

            புகழுவது போலவும் .........

            சிறந்த பெண்ணை பெற்றதால்

            பூரிக்கும் பெற்றோரை ...

           பூக்களின் மத்தியில்

           கண்டது போலவும்...


எதையோ சாதித்த


மகிழ்வு......


          ஆ... என்ன இது.....?


          கூர்மையான பற்கள் ....

          அம்மா ...

         என்னை காப்பாற்று ...

         என்னை குத்துகின்றன .....

        ஆ ... என் கை....

         அம்மா......! ஆ.. ஆ....


வெளி உலகை பாராமல்


கருவில் கலைந்தது ...

என் கனவு மட்டுமல்ல ...

என் வாழ்வும் தான்.....



(கருவில் அழிக்கப்பட்ட ஒரு சிறுமி )


நண்பர்களே .....




சிசு கொலைக்கு எதிராக நீங்களும் உங்கள் கருத்துகளை பகிரலாமே.....!

Related post



4 கருத்துகள்:

  1. இன்னும்தான் முழுமையாக மாறவி்ல்லை சமூகநிலை.

    ஆணென்ன? பெண்ணென்ன?

    ஆண் - வரவு
    பெண் - செலவு

    என்னும் மனநிலை மாறவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு

    சிசு உருவாக காரணமாய் இருந்தவிட்டு அதை முளையிலேயெ கிள்ளி எறிவது ஏன் ?

    மாற்றம் வரவேண்டும் இச்சமுதாயத்தில்..

    நட்புடன்
    சம்பத்

    பதிலளிநீக்கு
  3. கருவின் வ்ழியில் சிந்தனை ஒரு வித்தியாசமான
    அருமையான சிந்தனை
    அழகான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஐயா , வாருங்கள் . தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு